நடிகைகள் முதலில் பலியாவது மேக்கப்மேனிடம் தான்.. சினிமாவில் ஒழுக்கம் இல்ல..பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை: விரைவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும் பலவிதமான செயல்களை செய்து வருகின்றனர். இதில், எளிதில் பிரபலமாக ஜொலிக்க உறுதுணையாக இருப்பது மீடியாக்கள் மற்றும் சினிமாவாக இருப்பதால், இதில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என பலரும் தவம் கிடக்கின்றனர். சினிமாவில் முன்பு நடிக்க வேண்டும் என்றால் பணம் கொடுத்து தான் நடிக்க வேண்டிய நிலை இருந்தது. அந்த நிலை மாறி நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் சினிமாவில் வாய்ப்பை பெறுவது என்பது எட்டா கனியாக இருப்பதால், பலர் சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொள்ள வேண்டிய நிலை இருப்பதாக பல நடிகைகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு ஓகே சொன்ன நடிகைகளுக்கு சினிமாவில் அதிக வாய்ப்பினை பெறுவதாகவும், விருப்பம் இல்லாத நடிகைகள் ஒரு சில படங்களிலேயே ஓரங்கட்டப்பட்டு, அதன்பிறகு அவர்களுக்கு வாய்ப்பே வராததால், அவர்கள் விலகுகின்றனர். சினிமாவில் நடக்கும் அவலம் குறித்து, துணை நடிகையாக மாலதி,. தற்போது இளம் நடிகைகளை விட அம்மா நடிகைகளுக்குகே டிமான்ட்ஸ் அதிகமாக இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

டாக்டர் காந்தராஜ்: சினிமாவில் இருக்கும் அட்ஜென்ட்மென்ட் குறித்து டாக்டர் காந்தராஜ் யூ டியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், சினிமாத்துறையில் விபச்சாரம் என்பது ஒரு சைட் தொழில், பல நேரத்தில் தவறான பெண்களே சினிமாவில் இருந்தார்கள். ஒரு நடிகையின் நடிப்பை யார் பார்த்தா, ஒரு நடிகை என்று வரும் போதே கவர்ச்சிதான் தேவைப்படுகிறது. படத்தில் உடம்பை காட்டுவது தான். அவர்கள் எவ்வளவு நாள் பிரபலமாக, இளமையாக இருக்கிறார்களோ அதற்குள் வருமானத்தை பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேக்கப் மேனிடம் பலிகடா: நடிகையாக வருபவர்கள் கற்போடு இருப்பது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. நடிகை சினிமாவில் அறிமுகம் ஆகும் போது, ஒரு மேக்கப் மேனிடம் அனுப்புவார்கள், அந்த மேக்கப் மேன், உடம்பு முழுக்க பார்த்தால் தான் உனக்கு எந்த உடை செட் ஆகும் என்று சொல்லுவேன் என்று சொல்வார். ஏன் என்றால் மேக்கப் மேனிடம் கேட்டு விட்டுத்தான், காஸ்ட்டியூம் டிசைனர் எந்த உடை ஏற்ற உடை என்று முடிவு செய்வார். இதனால் நடிகைகள் முதலில் பலிகடா ஆவது மேக்கப் மேனிடம் தான்.
இதனால் தான், நடிகைகள் சினிமாவில் எவ்வளவு சீக்கிரம் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்துவிட வேண்டும் என்பதை லட்சியமாக வைத்து இருக்கிறார்கள் என்று, சினிமாவில் நடிகைகள் படும் கஷ்டம் குறித்து டாக்டர் காந்தராஜ் ஒரு பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











