Just In
- 6 min ago
ஆரி கன்னத்தில் முத்தம்.. போட்டோவை பகிர்ந்து மியூஸ் யூ என உருகும் பிரபலம்.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- 56 min ago
மகாபாரத கேரக்டர்.. சினிமாவாகும் சகுந்தலையின் காதல்.. சமந்தா ஜோடியானார் இளம் நடிகர்!
- 1 hr ago
'விசித்திரன்' டைட்டில் விவகாரம்.. இயக்குநர் பாலா, ஆர்.கே.சுரேஷுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
- 2 hrs ago
பாண்டிராஜ் இயக்கும் படம்.. நடிகர் சூர்யா ஜோடியாக இந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராமே?
Don't Miss!
- News
வேளாண் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்த அரசு முடிவு...நாளைய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா?
- Sports
ரொம்ப பெரிய கவுரவம் இது... சந்தோஷமா இருக்கு.... வார்த்தையால சொல்ல முடியல... சஞ்சு சாம்சன் உருக்கம்
- Automobiles
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!
- Lifestyle
ஃபிட்டா இருக்கணுமா? அப்ப இத வாரத்துக்கு 6 நாள் ஃபாலோ பண்ணுங்க..
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குவிந்த பெண்கள்.. வசூலை அள்ளிய திரௌபதி.. இயக்குனர் ஹேப்பி !
சென்னை: சுமார் ஆறு கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாம் திரௌபதி திரைப்படம்.
இயக்குநர் மோகன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் திரௌபதி. பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் இப்படம் வெளியானது. நாடகக்காதல் என்ற சமீப கால விவகாரத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது திரௌபதி.

ரிஷி, ஷீலா, கருணாஸ் போன்ற பலர் நடித்து மோகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம் தமிழில் வெளியான முதல் க்ரவ்டு ஃபன்டிங் திரைப்படம் என்று சொல்லப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது இப்படம்.
பல அரசியல் பிரமுகர்கள் இப்படத்தை பார்த்து பாராட்டினர் மற்றும் முதல் நாளே இப்படம் நல்ல வசூலை சந்தித்தது. சுமார் ஒரு கோடிக்கும் கீழ் தான் இந்த படத்தின் பட்ஜெட், முதல் நாள் இப்படம் 1.50 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் குறிப்பாக வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுடன் சென்று படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் படத்திற்கு பெற்றோரின் ஆதரவும் அதிகம் கிடைத்துள்ளது.
தர்பார் படத்திற்கு பிறகு முதல் நாள் வசூல் மற்றும் ஒரு நல்ல மார்கெட் இந்த படத்திற்கு தான் என்று ஒரு பிரபல திரையரங்கம் சமீபத்தில் ஒரு டிவிட்டை பதிவிட்டது. தற்போது இப்படம் தமிழகம் முழுவதும் முதல் மூன்று நாளில் சுமார் ஆறு கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் மட்டும் இப்படம் முதல் மூன்று நாளில் 55 லட்சம் வரை வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் இது போன்ற ஒரு படத்தை ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள் என்று இயக்குனர் மோகன் கூறியிருந்தார். அவரது நம்பிக்கை பலித்துள்ளது, அவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.