நடுக்கடலில் இளைஞருடன் மாலையும் கழுத்துமாய் திரௌபதி நடிகை.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: திரௌபதி நடிகை ஷீலா நடுக்கடலில் இளைஞருடன் மாலையும் கழுத்துமாய் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழில் ஆறாது சினம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷீலா. பரதநாட்டிய டான்ஸரான ஷீலா, பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஷீலா, டு லெட், மனுசங்கடா, அசுரவதம், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

திரௌபதி மூலம் பிரபலம்
மலையாள படத்திலும் நடித்துள்ளார் ஷீலா. கடந்த ஆண்டு இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் பெரும் பிரபலமானார்.

மண்டேலா படத்திலும்
இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து அண்மையில் யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்திலும் நடித்துள்ளார் ஷீலா.

மாயத்திரை
இந்தப் படத்தில் போஸ்ட் மாஸ்டராக நடித்துள்ளார் ஷீலா. இதிலும் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது மாயத்திரை என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஷீலாவின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாலையும் கழுத்துமாய்
அந்த போட்டோவில் நடுக்கடலில் மீன்பிடி போட்டில் இளைஞருடன் மாலையும் கழுத்துமாய் உள்ளார் ஷீலா. ஷீலா கடந்த 2014 ஆம் ஆண்டு நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

வைரலாகும் போட்டோ
அப்போது எடுத்துக் கொண்ட போட்டோதான் இது. இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷீலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











