Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட இதுதாங்க வழி.. பெண்களுக்கு இப்படி ஐடியா கொடுத்த 'திரெளபதி' இயக்குனர்!
சென்னை: டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடுவதற்கு திரெளபதி பட இயக்குனர் கொடுத்துள்ள ஐடியா பரப்பரை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ், நிஷாந்த், ஜீவா ரவி உட்பட பலர் நடித்த படம், திரெளபதி. இதை மோகன் ஜி என்பவர் தயாரித்து இயக்கி இருந்தார்.
கொரோனா உதவி.. களத்தில் இறங்கிய ரஜினி ரசிகர்கள்.. டிரெண்டாகும் #CoronaReliefByRAJINIsoldiers
இவர், ஏற்கனவே 'பழைய வண்ணாரப்பேட்டை' என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் பிரஜின், அஸ்மிதா, ரிச்சர்ட் ரிஷி, கருணாஸ் உட்பட பலர் நடித்திருந்தார்.
குறைந்த பட்ஜெட்
பொலிட்டிக்கல் கிரைம் திரில்லர் படமான இது கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி, கவனிக்கப்பட்டது. இதையடுத்துதான் அவர் திரெளபதி படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் பிப்ரவரி 28ஆம் தேதி ரிலீஸ் ஆனது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
உங்களால் முடியும்
இந்தப் படத்தின் மூலம் பிரபலமானார் மோகன் ஜி., சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவர், டாஸ்மாக்கை ஒழிக்க ஒரு ஐடியா கொடுத்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் 'பெண்கள் ஒட்டுமொத்தமாக #NoMoreTASMAC என பதிவிடுங்கள். உங்கள் கோரிக்கை, அரசாங்கத்திற்கு கேட்கும் வரை.. Social network மூலமாக இதை உங்களால் நடத்தி காட்ட முடியும்' என்று தெரிவித்துள்ளார்.
எப்படி மூடுவார்கள்?
இதையடுத்து #NoMoreTASMAC என்ற இந்த ஹேஷ்டேக் டிரெண்டானது. இந்த ஹேஷ்டேக்கில் ஏராளமானவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அரசு அதை ஏற்காது என்றும், அதுதான் அரசுக்கு வருமானமே, அதை எப்படி மூடுவார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையடுத்து அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் நிச்சயம் முதல்வர் செவி கொடுப்பார்' என்று மோகன் ஜி கூறியுள்ளார்.
ஊதியம் தவறினால்
அதற்கு ஒருவர், 12 லட்சம் அரசு ஊழியர்கள், 7 லட்சம் pensionவாதிகள், மாதம் பிறந்தால் 50 ஆயிரம் கோடி முதல் வைக்க வேண்டும் சார். #குறிப்பு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தவறினால் ஆட்சி Dismissed ஆக வாய்ப்புகள் உள்ளன' என்று கூறியிருந்தார்.
முக்கிய எண்ணம்
இதற்கு பதிலளித்துள்ள மோகன் ஜி. அத்தனை tasmac கடைகளையும் organic market, merchant store, flower bazzar, spices market, ஆக மாற்றினால் வருமானம் வரும். அரசாங்கத்திற்கு மாற்ற வழி தெரியும். யார் வேலை வாய்ப்பையும் கெடுக்கும் எண்ணம் இதில் இல்லை. பலரின் நலனே முக்கிய எண்ணம்' என்று மற்றொரு பதிவில் கூறியுள்ளார்.
மனம் மாறுங்கள்
மற்றொரு பதிவில், இன்று கையில் சேமிப்பு இல்லாமல் துன்பப்படும் பலரின் உண்மையான காரணம் இந்த #TASMAC தான். உங்களை பிச்சைக்காரன் என சிலர் கூறுவதற்கு காரணமும் இந்த TASMAC தான்.. உடல் வலிக்கு இது தீர்வு அல்ல.. மனம் மாறுங்கள்.. வாழ்க்கை மாறும்' என்று கூறியுள்ளார். இது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.