Don't Miss!
- News அள்ள அள்ள தங்கம்.. பளபளன்னு ஜொலித்த நகைகள்.. திருவண்ணாமலை பேங்க்கில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அடக்கடவுளே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போதைப் பொருள் வழக்கு: சிறப்பு விசாரணை குழு முன்பு நடிகை சார்மி ஆஜர்
ஹைதராபாத்: போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜரானார் நடிகை சார்மி கவுர்.
போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகுமாறு தெலுங்கானா போலீசார் நடிகை சார்மி கவுருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து சார்மி இது தொடர்பாக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் சார்மியை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தான் விசாரிக்க வேண்டும், அப்போது பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் உடனிருக்க வேண்டும், விசாரணையை வீடியோ எடுக்க வேண்டும், அவர் அனுமதி இல்லாமல் ரத்த மாதிரி எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சார்மி விசாரணை குழு முன்பு இன்று ஆஜராகியுள்ளார். ஹைதராபாத்தின் நம்பள்ளி பகுதியில் உள்ள அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளார்.
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை முமைத் கான் சிறப்பு விசாரணை குழு முன்பு நாளை ஆஜராகிறார்.