Don't Miss!
- News "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை!" 12 ஆண்டுகளுக்கு பின் 2ஜி வழக்கின் தீர்ப்பில்.. மத்திய அரசு மேல்முறையீடு
- Finance எம்.எஸ்.தோனி-யை திட்டம் போட்டு தூக்கிய Citreon..!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போதைப் பொருள் விவகாரம்.. லாக்கப்பில் சஞ்சனா - ராகிணி திவேதி திடீர் மோதல்.. ஏற்கனவே ஆகாதாமே!
பெங்களூரு: போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகைகள் சஞ்சனா கல்ராணியும் ராகிணி திவேதியும் மோதிக் கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த டிவி நடிகை அனிகா உள்பட 3 பேர் கடந்த மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இவங்க தான் ஹீரோயினாம்.. வெற்றிமாறன் முடிவால் ஏமாந்து போன ரசிகர்கள்?
இந்திரஜித் லங்கேஷ்
திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்துள்ளார். இந்நிலையில், கன்னட சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளின் போது போதைப் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இளம் நடிகர், நடிகைகள் அதைப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர் அதைப் பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் ஒப்படைத்தார்.
ராகிணி திவேதி
இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் ஜெயநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரிடம் நடத்திய விசாரணையில் நடிகை ராகிணி திவேதியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டில் சோதனை செய்த போலீசார் கடந்த 4 ஆம் தேதி அவரை கைது செய்தனர்.
சஞ்சனா கல்ராணி
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் கன்னட நடிகையும் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான சஞ்சனா கல்ராணியின் நண்பர், ராகுல் என்பவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரும் சஞ்சனா கல்ராணி உள்பட போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகளின் விவரங்களை தெரிவித்துள்ளார்.
தனித்தனியாக
பின்னர் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகைகள் 2 பேரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் சமாதானம்
கைது செய்யப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி திவேதிக்கும் சஞ்சனா கல்ராணிக்கும் ஏற்கனவே பிரச்னை. இந்நிலையில் லாக்கப்பில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. லைட்டை அணைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் போட்ட சண்டையை அடுத்து பெண் போலீசார் சமாதானம் செய்ய முற்பட்டதாகவும் அவர்களையும் இருவரும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே