Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
போதைப் பொருள் விவகாரம்.. சிக்குகிறாரா தீபிகா படுகோனே? மேனேஜருக்கு சம்மன் அனுப்பியதால் பரபரப்பு!
மும்பை: போதைப் பொருள் தடுப்புப் பிரிவான NCB நடிகை தீபிகா படுகோனேவின் மேனேஜருக்கு சம்மன் அனுப்பி இருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு, தற்போது பாலிவுட்டில் புழங்கி வரும் போதைப் பொருள் விவகார வழக்காக மாறி வருகிறது.
நடிகை ரியா சக்கரவர்த்தி கைதை தொடர்ந்து, தற்போது போதைப் பொருள் விவகாரத்தில் முன்னணி நடிகை தீபிகா படுகோனே பெயர் அடிபட்டு வருகிறது.
சூர்யா வெளியிட்ட 'வெற்றிவேலா' ஆல்பம்.. அறுபடை வீட்டுக்கும் பாட்டுப் போட்ட பாடகர் கிரிஷ்!
சிக்க வைத்த வாட்சப்
கடந்த 2017ல் K என்ற நபரிடம் D என்ற பிரபலம் ‘மால்' (போதைப் பொருள்) இருக்கிறதா என்ற கேட்ட வாட்சப் மெசேஜால் தற்போது முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவின் பெயர் போதைப் பொருள் விவகாரத்தில் அடிபட்டு வருகிறது. K என்ற நபர் தீபிகா படுகோனேவின் மேனேஜர் கரிஷ்மா பிரகாஷ் என தெரியவந்திருப்பது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
விசாரணைக்கு
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், நடிகை தீபிகா படுகோனேவின் மேனேஜர் கரிஷ்மா பிரகாஷ் மற்றும் டேலன்ட் மேனேஜ்மென்ட் ஏஜெண்ட் சி.இ.ஓ துருவ் சித்கோபேக்கர் உள்ளிட்ட இருவருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இருவரையும் விசாரணை செய்ய NCB சம்மன் அனுப்பி உள்ளது.
கங்கனா குற்றச்சாட்டு
இந்த விவகாரம் குறித்த தகவல்கள் வெளியானதும் ட்விட்டரில் தீபிகா படுகோனே பெயர் டிரெண்ட் ஆகி வருகிறது. பாலிவுட் ரசிகர்கள், நீங்களுமா? என கேள்வி எழுப்பி தீபிகா படுகோனேவை கழுவி ஊற்றி வருகின்றனர். நடிகை கங்கனா ரனாவத், இதுபோன்ற போதைப் பொருட்களை உட்கொண்டால் மன அழுத்தம் தான் ஏற்படும் என நடிகை தீபிகாவை கிண்டல் செய்து ட்வீட் ஒன்றும் போட்டுள்ளார்.
தீபிகா சிக்குவாரா
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீபிகா படுகோனேவின் மேனேஜரை விசாரிக்கும் பட்சத்தில் நடிகை தீபிகா படுகோனேவும் நடிகை ரியா சக்கரவர்த்தியை போல கைது செய்யப்படுவார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகை தீபிகா படுகோனே இந்த விவகாரம் குறித்து என்ன சொல்வார் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Recommended Video
ஏற்கனவே
முன்னதாக நடிகை ரியா சக்கரவர்த்தி, போதைப் பொருள் பயன்படுத்திய நடிகைகள் என ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாரா அலி கான் பெயர்களை வெளியிட்டார் என்ற ஒரு தகவல் வெளியானது. ஆனால், NCB அதனை மறுத்த நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் வழக்கு தொடர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.