Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
போதைப் பொருள் விசாரணை: நடிகை முமைத் கானுக்காக விதிகளை தளர்த்த பிக் பாஸ்
ஹைதராபாத்: போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகை முமைத் கான் சிறப்பு விசாரணை குழு முன்பு இன்று ஆஜரானார்.
போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகை முமைத் கானுக்கு தெலுங்கானா போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். போதைப் பொருள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முமைத் கான் ஒரு நாள் லீவு போட்டுவிட்டு ஹைதராபாத் வந்துள்ளார். மும்பை அருகே உள்ள லோனாவாலா பகுதியில் தான் தெலுங்கு பிக் பாஸ் வீட்டு உள்ளது.
ஏற்கனவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சம்பூர்ணேஷ் பாபு உடல்நலக் குறைவு காரணமாக வெளியேறினார். இதையடுத்து விசாரணைக்காக முமைத் கானும் வெளியேறுகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் முமைத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவில்லை.
மாறாக விசாரணைக்காக ஒரு நாள் அனுமதி பெற்று ஹைதராபாத் வந்துள்ளார். பிக் பாஸ் விதிகளின்படி எந்த போட்டியாளரும் இடையே வெளியே சென்று வர முடியாது. முதல்முறையாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.