Don't Miss!
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
போதைப் பொருள் விசாரணை: நடிகை முமைத் கானுக்காக விதிகளை தளர்த்த பிக் பாஸ்
ஹைதராபாத்: போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகை முமைத் கான் சிறப்பு விசாரணை குழு முன்பு இன்று ஆஜரானார்.
போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகை முமைத் கானுக்கு தெலுங்கானா போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். போதைப் பொருள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முமைத் கான் ஒரு நாள் லீவு போட்டுவிட்டு ஹைதராபாத் வந்துள்ளார். மும்பை அருகே உள்ள லோனாவாலா பகுதியில் தான் தெலுங்கு பிக் பாஸ் வீட்டு உள்ளது.
ஏற்கனவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சம்பூர்ணேஷ் பாபு உடல்நலக் குறைவு காரணமாக வெளியேறினார். இதையடுத்து விசாரணைக்காக முமைத் கானும் வெளியேறுகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் முமைத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவில்லை.
மாறாக விசாரணைக்காக ஒரு நாள் அனுமதி பெற்று ஹைதராபாத் வந்துள்ளார். பிக் பாஸ் விதிகளின்படி எந்த போட்டியாளரும் இடையே வெளியே சென்று வர முடியாது. முதல்முறையாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.