Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போதைப் பொருள் பூதம் கிளம்ப காரணமாக இருந்தவரின் அண்ணன் நடிகரிடம் விசாரணை
ஹைதராபாத்: போதைப் பொருள் வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா சிறப்பு விசாரணை குழு முன்பு இன்று ஆஜரானார்.
போதைப் பொருள் வழக்கில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 15 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். அவர்கள் ஒவ்வொருவராக சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி வருகிறார்கள்.
நேற்று நடிகை முமைத் கான் ஆஜரானார். இதையடுத்து இன்று பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இந்த வழக்கில் ரவி தேஜா மீதான குற்றம் என்னெவன்று போலீசார் தெரிவிக்கவில்லை.
முன்னதாக ரவி தேஜாவின் சகோதரர் பரத் ராஜ் கார் விபத்தில் பலியானபோது தான் போதைப் பொருள் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அவரது செல்போனில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களின் எண்கள் இருந்தது. முன்னதாக பரத்தும் போதைப் பொருள் வைத்திருந்து கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள அனைத்து பிரபலங்களுமே இதற்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.