Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
போதைபொருள் வழக்கு.. கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை டாக்டருடன் ரகசிய திருமணம்? வைரலாகும் போட்டோ!
பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை, டாக்டரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த டிவி நடிகை அனிகா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
போதைப் பொருள் விவகாரம்.. லாக்கப்பில் சஞ்சனா - ராகிணி திவேதி திடீர் மோதல்.. ஏற்கனவே ஆகாதாமே!
இந்திரஜித் லங்கேஷ்
இதையடுத்து கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இளம் நடிகர், நடிகைகள் அதைப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர் அதைப் பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ராகிணி திவேதி
இவரிடம் நடத்திய விசாரணையில், நடிகை ராகிணி திவேதியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டில் சோதனை செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் நடிகை சஞ்சனா கல்ராணியையும் போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் உள்ள இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சஞ்சனா கல்ராணி
இந்நிலையில், நடிகை சஞ்சனா கல்ராணி, டாக்டர் ஒருவரை திருமணம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் போட்டோ ஒன்று வைரலானது. போலீசார் சோதனை நடத்த வரும் முன், நடிகை சஞ்சனா கல்ராணியின் வீட்டில் இருந்து ஒருவர் வெளியே சென்றதாக தகவல் வெளியானது. அவர் டாக்டர் அஜீஸ் பாஷா என்று தெரியவந்துள்ளது.
திருமணம் ஆகவில்லை
சஞ்சனா கல்ராணியும், அஜீஸ் பாஷாவும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதை நடிகை சஞ்சனா கல்ராணி மறுத்துள்ளார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.
வெளிநாட்டில் திருமணம்
இந்த நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணி, டாக்டர் அஜீஸ் பாஷா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சஞ்சனா கல்ராணியும், அஜீஸ் பாஷாவும் வெளிநாட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
நிச்சயதார்த்தம் நடந்தது
இதுபற்றி நடிகை சஞ்சனாவின் அம்மா ரேஷ்மா கல்ராணி கூறும்போது, சஞ்சனா கல்ராணிக்கு டாக்டர் அஜீஸ் பாஷாவுடன் கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொள்ள இருந்தனர். கொரோனா வைரஸ் காரணமாகத் திருமணத்தை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது என்றார்.