Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
போதை வழக்கு: நடிகர்கள், நடிகைகளை தப்ப வைத்துவிட்டனர்-ஆர்டிஐ ஆர்வலர் குமுறல்
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகை அதிர வைத்த போதைப் பொருள் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் எந்த பிரபலத்தின் பெயரும் இல்லை.
தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் சிலர் போதைப் பொருள் பயன்படுத்தியதுடன், விற்பனையும் செய்ததாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
சிலரிடம் காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து பலமணிநேரம் விசாரணை எல்லாம் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கின் குற்றப்பத்திரிகைகளில் எந்த பிரபலத்தின் பெயரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
பத்மநாப ரெட்டி என்பவர் தகவல் அறியும் சட்டம் மூலம் விண்ணப்பித்து இந்த தகவலை பெற்றுள்ளார். புரி ஜெகன்நாத், சார்மி, முமைத் கான், ரவி தேஜா, சின்னா, நந்து, தருண், நவ்தீப், சுப்பா ராஜ் என்று யார் பெயருமே குற்றப்பத்திரிகையில் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது என்கிறார் பத்மநாப ரெட்டி.
கஜா புயலில் வீட்டை இழந்த பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்த ராகவா லாரன்ஸ்
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
போதைப் பொருள் வழக்கு விசாரணை நடந்தபோது தெலுங்கு நடிகர் சங்கம் சார்பில் முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து பேசினார்கள். அதன் பிறகே விசாரணை மந்தம் அடைந்தது. இந்த விசாரணை மீது சந்தேகம் உள்ளது. பிரபலங்களை தப்ப வைத்து வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டனர். பெயருக்காக அப்பாவிகளின் பெயர்களை குற்றப் பத்திரிகைகளில் சேர்த்துள்ளனர் என்கிறார்.