Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாகுபலி பார்க்க முடியலையே... சோகத்தில் துபாய் ரசிகர்கள்!
பாகுபலி படத்தை உலகமே பார்த்து ரசித்துக் கொண்டாடிய முதல் நாளில், அந்தப் படத்தைப் பார்க்க முடியாமல் தவித்திருக்கிறார்கள் துபாய்வாசிகள்.
துபாயில் பல மொழி மக்கள் வசித்தாலும், தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அங்கு வெளியாகும் தமிழ்ப் படங்களை ஹிட்டடிக்க வைப்பதில் பெரும் பங்கு இவர்களுக்கு உண்டு.
பாகுபலி படம் குறித்த எதிர்ப்பார்ப்பு காரணமாக, இந்தப் படத்தை தமிழில் பார்க்க பல ஆயிரம் ரசிகர்கள் காத்திருந்தனர்.
நேற்று துபாயில் இந்தப் படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் மட்டும் வெளியாகின. ஆனால் படத்துக்காக ஆவலுடன் காத்திருந்த பல ஆயிரம் தமிழ் ரசிகர்கள் ஏமாந்துவிட்டனர். காரணம் அறிவித்த அரங்குகளில் தமிழ்ப் பதிப்பு வெளியாகவில்லை.
காலை மற்றும் பிற்பகல் காட்சிகளுக்கு தமிழ்ப் பதிப்பு வெளியாகாததால், ரசிகர்கள் பலரும் டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெற்றனர். சிலரோ, இந்தி, தெலுங்காக இருந்தாலும் பரவாயில்லை என படத்தைப் பார்த்தார்களாம்.