Don't Miss!
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
தீவிரமடையும் ஸ்ரீதேவி வழக்கு: ஹோட்டல் ஊழியர்கள், மணமகன் குடும்பத்தாரிடம் விசாரணை
Recommended Video
துபாய்: ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நாத்தனார் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் அறை எண் 2201ல் தங்கியிருந்தார்.
இந்நிலையில் மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
விசாரணை
ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.
ஹோட்டல் ஊழியர்கள்
மணமகன் மோஹித் மர்வாவின் குடும்பத்தார் மற்றும் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் துபாய் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
ஸ்ரீதேவி
துபாய் போலீசார் ஸ்ரீதேவியின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு சீல் வைத்துள்ளனர். ஹோட்டலின் சிசிடிவி கேமரா பதிவுகளையும் தங்களிடம் அளிக்குமாறு நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.
மாற்றம்
ஸ்ரீதேவியின் வழக்கை துபாய் போலீசார் துபாய் பப்ளிக் ப்ராசிகியூஷனுக்கு மாற்றம் செய்துள்ளனர். விசாரணை நடந்து கொண்டிருப்பதால் ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதில் தாமதமாகி வருகிறது.