Don't Miss!
- News பயங்கரமாக சரிந்த வாக்குப்பதிவு.. 15 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. அந்தமானில் ஆர்வம் காட்டாத மக்கள்! ஏன்
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
தீவிரமடையும் ஸ்ரீதேவி வழக்கு: ஹோட்டல் ஊழியர்கள், மணமகன் குடும்பத்தாரிடம் விசாரணை
Recommended Video
துபாய்: ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நாத்தனார் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் அறை எண் 2201ல் தங்கியிருந்தார்.
இந்நிலையில் மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
விசாரணை
ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.
ஹோட்டல் ஊழியர்கள்
மணமகன் மோஹித் மர்வாவின் குடும்பத்தார் மற்றும் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் துபாய் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
ஸ்ரீதேவி
துபாய் போலீசார் ஸ்ரீதேவியின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு சீல் வைத்துள்ளனர். ஹோட்டலின் சிசிடிவி கேமரா பதிவுகளையும் தங்களிடம் அளிக்குமாறு நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.
மாற்றம்
ஸ்ரீதேவியின் வழக்கை துபாய் போலீசார் துபாய் பப்ளிக் ப்ராசிகியூஷனுக்கு மாற்றம் செய்துள்ளனர். விசாரணை நடந்து கொண்டிருப்பதால் ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதில் தாமதமாகி வருகிறது.