Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தீவிரமடையும் ஸ்ரீதேவி வழக்கு: ஹோட்டல் ஊழியர்கள், மணமகன் குடும்பத்தாரிடம் விசாரணை
Recommended Video
துபாய்: ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நாத்தனார் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் அறை எண் 2201ல் தங்கியிருந்தார்.
இந்நிலையில் மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
விசாரணை
ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.
ஹோட்டல் ஊழியர்கள்
மணமகன் மோஹித் மர்வாவின் குடும்பத்தார் மற்றும் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் துபாய் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
ஸ்ரீதேவி
துபாய் போலீசார் ஸ்ரீதேவியின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு சீல் வைத்துள்ளனர். ஹோட்டலின் சிசிடிவி கேமரா பதிவுகளையும் தங்களிடம் அளிக்குமாறு நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.
மாற்றம்
ஸ்ரீதேவியின் வழக்கை துபாய் போலீசார் துபாய் பப்ளிக் ப்ராசிகியூஷனுக்கு மாற்றம் செய்துள்ளனர். விசாரணை நடந்து கொண்டிருப்பதால் ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதில் தாமதமாகி வருகிறது.