Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
கமலின் இந்தியன் 2, மாஸ்டர், சக்ராவைத் தொடர்ந்து.. விஜய் சேதுபதி படத்தின் டப்பிங்கும் தொடங்கியது!
சென்னை: இந்தியன் 2, மாஸ்டர், சக்ரா உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் டப்பிங் இன்று தொடங்கி உள்ளது.
Recommended Video
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் படம், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார்.
இயக்குநர் ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இவர். படத்தைச் சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக, இசக்கி துரை தயாரிக்கிறார்.
முன்னாள் காதலியுடன் நிர்வாண போஸ்.. 25 வருடத்துக்கு பின் வெளியிட்ட நடிகர்.. தீயாய் பரவும் போட்டோ!
மகிழ் திருமேனி
சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்.கே.அஜெய்குமார் இணை தயாரிப்பு செய்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி நடிக்கிறார். மற்றும் விவேக், இயக்குனர் மோகன் ராஜா, கனிகா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் கொடைக்கானலில் தொடங்கி, கும்பகோணம், சென்னை உட்பட பல பகுதிகளில் நடந்துள்ளது.
லாக்டவுன்
இந்தப் படத்தின் கதை சர்வதேச அளவில் நடக்கும் பிரச்னையை பேசுவதாக இதன் இயக்குனர் ஏற்கனவே கூறியிருந்தார். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டன. பேட்ச் ஒர்க் மட்டுமே பாக்கி இருக்கிறது என்றும் அதோடு ஷூட்டிங் முடிந்ததும் என்றும் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான், கொரோனாவுக்காக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.
சினிமா பணிகள்
இந்த லாக்டவுன் காரணமாக, சுமார் 2 மாதமாக சினிமா தொடர்பான பணிகள் எதுவும் நடக்கவில்லை. படப்பிடிப்புகள் தொடங்க நாட்கள் ஆகும் என்றாலும், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் கடந்த 11 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன.
போஸ்ட் புரொடக்ஷன்
கமலின் இந்தியன் 2, விஜய்யின் மாஸ்டர் உட்பட பல்வேறு படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில், விஜய் சேதுபதி நடக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் டப்பிங் பணிகளும் இன்று தொடங்கியுள்ளன. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் இந்த பணிகள் தொடங்கி நடக்கின்றன. விஜய் சேதுபதி டப்பிங் பேசி வருகிறார்.