Don't Miss!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
துல்கர் சல்மான் படத்தில் இப்படி ஒரு சஸ்பென்சா?
திருவனந்தபுரம்:துல்கர் சல்மான், சவுபின் ஷாஹிர், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியாகிய மலையாளப் படம் ஒரு எமன்டான் பிரேமகதா. முழு நீள நகைச்சுவைப் படமாக வெளியாகியுள்ள இப்படம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் துல்கரின் கதாபாத்திரத்தின் பெயர் கடைசி வரை சொல்லப்பட்டிருக்காது. அனைவரும் அவரை லல்லு என்ற செல்லப்பெயரிலேயே அழைப்பார்கள். படத்தின் இறுதி காட்சியிலேயே அவரது கதாபாத்திரப் பெயர் சொல்லப்படும்.
ஒரு குழந்தை அவரிடம் உங்கள் பெயர் என்ன என கேட்கும்போது மோகன்லால் என பதிலளிப்பார் துல்கர்.
என்னை யாராவது ஐட்டம் என்றால் சப்புன்னு அறைந்துவிடுவேன்: நடிகை ஆவேசம்
முன்னதாக தமிழில், சிம்புவின் "அச்சம் என்பது மடைமையடா" படத்திலும் சிம்புவின் கதாபாத்திர பெயர் சஸ்பென்சாக வைக்கப்பட்டிருக்கும். படத்தில் அவரது பெயர் ரஜினிகாந்த். படம் முழுக்க தனது பெயரை கூறாத சிம்பு, கிளைமேக்சில் தான் தனது பெயரை வெளிப்படுத்துவார்.
அந்தந்த மொழி சூப்பர் ஸ்டார்களின் பெயரை வைத்தது மட்டுமல்லாமல், கிளைமேக்ஸ் வரை நாயகன் பெயரை சஸ்பென்சாக வைத்திருந்ததில் இரு படங்களும் ஒத்துப்போயுள்ளன.