Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிரபல நடிகரின் 2வது மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவான முதல் மனைவி
Recommended Video
பெங்களூரு: கன்னட நடிகர் துனியா விஜய்யின் 2வது மனைவியை தாக்கிய முதல் மனைவி தலைமறைவாகியுள்ளார்.
பிரபல கன்னட நடிகர் துனியா விஜய்க்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியான நாகரத்னா குழந்தைகள் மோனிகா, மோனிஷா, சாம்ராட் ஆகியோருடன் கதிரிகுப்பே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
விஜய் தனது இரண்டாவது மனைவி கீர்த்தி கவுடாவுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.
டாப்ஸி நடிக்க வந்த காரணத்தை கேட்டால் குபீர்னு சிரித்துவிடுவீர்கள்
தாக்குதல்
ஜிம் டிரெய்னரை தாக்கிய வழக்கில் துனியா விஜய் கடந்த மாதம் 23ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து நாகரத்னா விஜய்யின் வீட்டிற்கு சென்று தங்களின் கணவர் கைதுக்கு கீர்த்தி தான் காரணம் என்று கூறி அவரை தாக்கியுள்ளார். தனது செருப்பை கழற்றி அவர் கீர்த்தியை தாக்கிவிட்டு சென்றுள்ளார்.
புகார்
நாகரத்னா தன்னை தாக்கியதாக கீர்த்தி போலீசில் புகார் அளித்தார். கீர்த்தி தன்னை தாக்கியதாக நாகரத்னாவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் நாகரத்னா கீர்த்தியை தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்த போலீசார் தானாக வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்த நாகரத்னாவின் வீட்டிற்கு சென்றனர்.
அம்மா
போலீசார் வந்ததை பார்த்த மூத்த மகள் மோனிகா கதவை திறக்க மறுத்தார். அந்த நேரத்தில் நாகரத்னா தப்பியோடிவிட்டார். போலீசார் வீட்டிற்குள் சென்றபோது நாகரத்னா இல்லை. தலைமறைவாக உள்ள நாகரத்னாவை போலீசார் தேடி வருகிறார்கள். விசராணைக்கு ஒத்துழைக்காத மோனிகா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று விஜய் போலீசாரை கேட்டுக் கொண்டார்.
மனைவிகள்
மோனிகாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு கீர்த்தியும், விஜய்யும் கேட்டதாகவும் அதற்கு நாகரத்னா மறுத்ததாகவும் கூறப்படுகிறது. மகளை யார் கட்டுப்பாட்டில் வைப்பது என்பது தொடர்பாக இரண்டு மனைவிகளுக்கு இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக அப்பாவும், சித்தி கீர்த்தியும் தன்னை தாக்கியதாக மோனிகா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.