Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தீவிர போலீஸ் கண்காணிப்பு... சென்னையிலிருந்து சினிமா அலுவலகத்தை மதுரைக்கு மாற்றிய துரை தயாநிதி!
கடந்த திமுக ஆட்சியின்போது ஆரம்பிக்கப்பட்டது இந்த க்ளவுட் நைன். தயாரிப்பு, விநியோகம் என படு பிஸியாக இருந்தது இந்த நிறுவனம். கடைசியாக மங்காத்தாவை தயாரித்து வெளியிட்டது.
இதற்கிடையே ஆட்சி மாறிய பிறகு, க்ளவுட் நைன் சட்டென்று அமைதி காட்டியது. இப்போது புதிய படம் ஒன்றைத் தயாரித்து வரும் நிலையில், நிறுவன உரிமையாளர் தயாநிதிக்கு கிரானைட் விவகாரத்தில் பெரும் சிக்கல் எழுந்தது.
அவரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட, துரை தயாநிதி தலைமறைவாக இருந்தபடி முன்ஜாமீனுக்கு முயன்று வருகிறார்.
அவரது நடமாட்டத்தை போலீசார் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். க்ளவுட் நைன் அலுவலகத்தை தொடர்ந்து நோட்டமிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சென்னையில், பாரதிராஜாவின் பழைய வீட்டில் இயங்கி வந்த தனது அலுவலகத்தைக் காலி செய்துவிட்டு, அங்கிருந்த பொருட்களை மதுரைக்கே கொண்டுபோய்விட்டதாகக் கூறப்படுகிறது.