Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இளையராஜா இசையில் 'இஎம்எஸ்ஸும் பெண்குட்டியும்'.. இலங்கை அகதிகள் கதை?
திருவனந்தபுரம்: மலையாளத்தில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. பெயரிலேயே பரபரப்பைத் தாங்கியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இப்படிப்பட்ட படங்களை நிச்சயம் மலையாளத்தில் மட்டுமே தயாரிக்க முடியும் என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
கேரளாவில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் போற்றப்படும் ஒரு மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் இஎம்எஸ் நம்பூதிரிபாடு. அவரது பெயரை வைத்து இப்படத்தைத் தயாரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பென்யாமின் என்பவர் எழுதிய சிறுகதைதான் இஎம்எஸ்ஸும் பெண்குட்டியும். இந்தக் கதையைத்தான் தற்போது அதே பெயரில் படமாக்கியுள்ளனர்.
இளையராஜா இசையில்
இளையராஜாவின் இசைதான் இப்படத்தின் முக்கிய நாயகர்களில் ஒன்று. திரைக்கதை, வசனத்தை முகம்மது சபீர் கவனிக்க, ஜெயனன் வின்சென்ட் கேமராவைக் கையாண்டுள்ளார்.
சரி கதை என்ன?
உலகெங்கும் பிரபலமாக இருந்து வரும் இடப் பெயர்ச்சி அதாவது மைக்ரேஷன்தான் படத்தின் கதையாகும். ஆதி காலத்திலிருந்தே இந்த இடப் பெயர்ச்சி நடந்து வருகிறது. இதைப் பற்றித்தான் இந்தப் படத்தின் கதையும் பேசுகிறது.
கேரள மக்களின் இடப் பெயர்ச்சி
இந்தியாவிலேயே வாழ்வாதாரத்திற்காக அதிக அளவில் இடம் பெயர்ந்து செல்வது கேரள மக்கள்தான். அதைப் பற்றிப் பேசுகிறது இப்படம்.
அமெரிக்காவில் நடக்கும் கதை
இக்கதை அமெரிக்காவில் நடப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளதாம். திருவாங்கூரைச் சேர்ந்த கிறிஸ்தவ ஜோடியான சீனிவாசன் மற்றும் கனிகா ஆகியோர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அதேபோல நரேனும், அமலாவும் இலங்கையிலிருந்து அகதிகளாக அமெரிக்காவுக்கு வருகின்றனர்.
சரவணனும் நடிக்கிறார்
நம்ம ஊர் சரவணனும் படத்தில் நடித்துள்ளார். அவர் போக மேலும் சில பிரபலங்களும் படத்தில் உள்ளனராம்.
சரி ஏன் இஎம்எஸ் பெயர்...?
படத்தின் கதை இடப் பெயர்ச்சியாக இருக்கும் நிலையில் முக்கிய அரசியல் தலைவரான இஎம்எஸ்ஸின் பெயரை ஏன் படத்திற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை. நம்ம ஊரில் இப்படி முக்கியத் தலைவர்களின் பெயர்களில் படம் எடுத்தால் என்னாகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை...
படம் வரட்டும் பார்க்கலாம்...