Don't Miss!
- Finance எம்.எஸ்.தோனி-யை திட்டம் போட்டு தூக்கிய Citreon..!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- News ‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒவ்வொரு மாணவரும் அப்துல்கலாமாக மாற வேண்டும்- வடிவேலு
சென்னை: மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமின் உடல் இன்று பகல் 11 மணிக்கு மேல் அவரின் சொந்த மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது, லட்சக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு தலைவர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் மக்களின் ஜனாதிபதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர், நடிகர்களில் விஜயகாந்த், சிவகார்த்திகேயன் மற்றும் வடிவேலு ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அப்துல்கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நிருபர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு அப்துல்கலாமைப் பற்றி பேசினார் " உலகத்தின் அனைத்து வல்லரசு நாடுகளையும், சர்வசாதாரணமாக பெயர் வைக்கப்படாத வல்லரசு நாடு இந்தியா என பீதியைக் கிளப்பி, இந்தியாவை தலைநிமிரச் செய்து தமிழன். அனைவருக்கும் பெருமையைச் சேர்த்த தமிழ் தங்கம் ஒரு மாபெரும் விஞ்ஞானி, இளைஞர்களுக்கேல்லாம் அவர் ஒரு கல்வி விளக்கு.
ஐயா ,அப்துல்கலாம் பிரிந்த நாள் நமக்கெல்லாம் ஒரு கருப்பு தினம். இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் அவர்களது உறவுக்காரர் இறந்தது போல் உணர்கிறேன் நான், அவர் நம்மை விட்டு பிரிந்தது மிகப்பெரிய வேதனை.
அவர்போலவே ஒவ்வொரு இளைஞர்களும், மாணவர்களும் ஒவ்வொரு அப்துல் கலாமாக மாறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.