Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த சிஎஸ்கே வீரர்.. டி20 உலககோப்பையில் சேர்க்க ரெய்னா கோரிக்கை
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஈஸ்வரி ராவ் கனவிலும் நினைக்காத விஷயத்தை செய்த பா. ரஞ்சித்
Recommended Video
சென்னை: காலா படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடிக்கத் தான் தன்னை அழைக்கிறார் பா. ரஞ்சித் என்று நினைத்தாராம் ஈஸ்வரி ராவ்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வர் ராவ் உள்ளிட்டோர் நடித்த காலா படம் உலக அளவில் ரூ. 112 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இளம் நடிகைகள் எல்லாம் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்பட ஈஸ்வரி ராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
காலா பட வாய்ப்பு வந்ததும் ஈஸ்வர் ராவ் வேறு மாதிரி நினைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
தனுஷ்
சுள்ளான் படத்தில் ரஜினியின் போஸ்டரை பார்த்து நடித்தது எனக்கு நினைவே இல்லை. ஒரு பேட்டியில் போட்டுக் காட்டியபோது தான் நினைவுக்கு வந்தது. ரஜினியுடன் சேர்ந்து நடிப்பேன் என்று நினைத்து பார்த்ததே இல்லை.
அம்மா
காலா படத்தில் நடிக்க அழைத்தபோது ரஜினியின் அம்மாவாக நடிக்க கூப்பிடுகிறார்கள் என்றே நினைத்தேன். நான் மட்டும் அல்ல, என் குடும்பத்தாரும் அப்படித்தான் நினைத்தார்கள்.
ரஜினி
40 வயசாச்சு. விஜய் சாரோட இல்ல ரஜினி சாரோடயும் டூயட் பாடவா கூப்பிட போறாங்க?. நான் ரஜினியின் அம்மா கதாபாத்திரத்திற்கு சரிபட்டு வர மாட்டேன் என்று ரஞ்சித் சாரிடம் தெரிவித்தேன். அவரோ நீங்க தான் ரஜினி சார் ஜோடி என்றார்.
வியப்பு
நான் தான் ரஜினி சார் ஜோடி என்றதும் எனக்கு வியப்பாக இருந்தது. கதைக்கு இப்படி ஒரு ஹீரோயின் தேவைப்பட்டதால் என்னை ஒப்பந்தம் செய்தார்கள். ரஜினி சாருடன் நடித்துவிட்டேன் என்பதால் இதே போன்ற கதாபாத்திரங்களை எதிர்பார்ப்பது சரியல்ல.
செல்வி
என் கதாபாத்திரம் முக்கியமானது என்று தெரியும். ஆனால் ரசிகர்கள் செல்வியை இந்த அளவுக்கு கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. தமிழ் மக்கள் மட்டும் அல்ல பல மொழி பேசும் ரசிகர்கள் கூட போன் செய்து வாழ்த்துகிறார்கள் என்கிறார் ஈஸ்வரி ராவ்.