Don't Miss!
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்க ‘பாப்கார்ன்’ பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைச்சுடுச்சு மக்களே!
அதிக விலைக்கு தின்பண்டங்கள் விற்ற தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்ற 114 தியேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் சிறிய திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதே பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்நிலையில் தியேட்டர் கேண்டீன்களில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலை அதிகமாக இருப்பதால், பலரும் திரையரங்குக்கு வருவதையே தவிர்த்து வருகின்றனர்.
தயாரிப்பாளர்கள் உட்பட திரைத்துறையினருக்கு தியேட்டர் பாப்கார்ன் பிரச்சினையே பெரும் பிரச்சினையாக நிலவி வந்தது. இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க பலமுறை திரைத்துறை சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுமக்களும் இது பற்றி புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 335 தியேட்டர்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, குறிப்பிட்ட விலைக்கு அதிகமாக பல திரையரங்குகளில் தின்பண்டங்கள் விற்பது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்றதாக 72 தியேட்டர் கேண்டீன் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், பொருட்கள் அடைக்கப்பட்ட பாக்கெட்டின் மீது முகவரி, விலை, உபயோகிக்க வேண்டிய காலம் உள்ளிட்ட தகவல்களை அச்சிடாமல் விற்பனை செய்த 42 தியேட்டர் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 'நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்தால் 'டிஎன் - எல் எம் சி டி எஸ்' (TN- LMCTS) என்ற மொபைல் செயலி மூலம் மக்கள் புகார் செய்யலாம்' என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
அதேபோல,சாலையோரக் கடைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களிலும் கூடுதல் விலைக்குப் பொருள்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் அளவு குறைத்து விற்று மோசடி செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் தொழிலாளர் நலத்துறை எச்சரித்துள்ளது.