Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தேசிய விருதுபெற்ற ஆடுகளம் எடிட்டர் கிஷோரின் நிலையைப் பாருங்கள்!
எடிட்டர் கிஷோர்... ஆடுகளம் படத்துக்காக சிறந்த படத் தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்ற 36 வயது இளைஞர்.
இன்று மரணத்தின் விளிம்பில். விஜயா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இந்த மிகச் சிறந்த திறமையாளரை நேற்று நள்ளிரவு வரை யாரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
மருத்துவமனை நிர்வாகமோ, 'இவர் கிட்டத்தட்ட இறந்துவிட்ட நிலைதான். இனி சிகிச்சையளிப்பதில் பலனில்லை' என்றே கூறிவிட்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த வேதனையில் கிஷோரின் தந்தைக்கு நெஞ்சுவலி வந்துவிட, அதே மருத்துவமனையில் அவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, தோனி, ஆரோகணம், பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, உன் சமையலறையில்... இப்படி தமிழ் சினிமாவின் தேர்ந்த 30 க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் கிஷோர்.
எந்தவித எதிர்பார்ப்புமின்றி, உலகத்தரமான சினிமாவை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு துணை நின்ற இந்த கிஷோரை, கவனிக்கக் கூட நேரமின்றி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார் அவருடன் பணியாற்றியவர்கள்.
இயக்குநர் வெற்றிமாறன்தான் கிஷோரை விஜயா மருத்துவமனையில் சேர்த்தாராம். அதன் பிறகு யாருமே அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். உடனிருந்து கவனிக்கவும் ஆளில்லையாம்.
சரி, அவரது உடம்புக்கு என்ன?
விசாரித்தால், மூளையில் ரத்தம் கசிந்து, இப்போது பெருமளவு பரவி, அவர் நினைவைப் பறித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
ஆனால் அவர் பிழைப்பார்... தயவு செய்து முயற்சி செய்யுங்கள் என்று மருத்துவர்களை கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் கிஷோரின் பெற்றோரும், நண்பர்களும்.
'திரையுலகினர் ஏதாவது செய்ய வேண்டும்... இவ்வளவு புகழ்பெற்ற, அதுவும் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிற ஒரு கலைஞனுக்கே இந்த நிலையா..' என்று குமுறித் தீர்க்கின்றனர் கிஷோரின் நண்பர்கள்.