Don't Miss!
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சேப்பாக்கம் ஷூ வீச்சு: மன்னிப்பு கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட விஜய், அஜீத் பட எடிட்டர் #FafDuPlessi
Recommended Video
சென்னை: ஐபிஎல் போட்டியின்போது மைதானத்தில் ஷூ வீசப்பட்டதை பார்த்த எடிட்டர் ரூபன் ஃபாப் டூப்ளசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக மக்கள் போராடி வரும் நேரத்தில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சோறா, ஸ்கோரா என்று கேட்டு போராடுகிறார்கள். இந்த போராட்டத்திற்கு இடையே நேற்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தது.
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்புக்கு இடையே நடைபெற்றது.
எதிர்ப்பு
மைதானத்திற்குள் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போட்டி நடந்து கொண்டிருந்தபோது சிலர் தங்களின் காலணிகளை கழற்றி மைதானத்தில் வீசினார்கள்.
ஷூ
மைதானத்திற்குள் விழுந்த ஷூ ஒன்றை சிஎஸ்கே வீரர் டூப்ளசி எடுத்து வந்து ஓரமாக போட்டார். கையில் ஷூவை எடுத்த பிறகு அவர் பார்வையாளர்களை பார்த்து என்னய்யா இப்படி பண்றீங்களேய்யா என்பது போன்று பாவமாக ஒரு பார்வை பார்த்தார்.
|
மன்னிப்பு
விருந்தோம்பல் - தமிழனின் தலையாய பண்பாடு! இதை செய்தவன் - தமிழினத்தில் ஒரு வேறுபாடு! மன்னிப்புக்கள் @faf1307 #CSKvKKR என்று ட்வீட்டியுள்ளார் ரூபன். ஆனால் இதற்கு கடுமையான எதிர் வினைகளை பல்வேறு தரப்பினரும், தமிழ் ஆர்வலர்களும் அவரது டிவீட்டில் ஆற்றி வருகின்றனர்.