Don't Miss!
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கல்வி, ஒழுக்கம், சிக்கனம்.... வாழ்வில் முன்னேற சிவக்குமார் தரும் அட்வைஸ்!
வாழ்வில் முன்னேற கல்வியும், ஒழுக்கமும் முக்கியம் என நடிகர் சிவக்குமார் கூறினார்.
Recommended Video
சென்னை: ஒருவர் வாழ்வில் முன்னேற கல்வியும், ஒழுக்கமும் தான் மிக முக்கியம் என நடிகர் சிவக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.
நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மற்றும் நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில், ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. சிவக்குமார், சூர்யா மற்றும் பேராசிரியர் கல்யாணி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
விழாவில் 21 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 2,05,000/- பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்கான 'தாய்தமிழ் பள்ளிக்கு' ஒரு லட்சம் ரூபாயும், முதல் தலைமுறை ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை அமைப்பிற்கு ஒரு லட்சம் ரூபாயும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய சிவக்குமார், " இங்கு பரிசு வாங்கிய குழந்தைகள் அனைவரும் நெசவு தொழிலாளி, தையல் தொழிலாளி குடும்பங்கள் என்று சொன்னாங்க. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், நீங்கள் பார்த்த வறுமையைவிட, அதிகமாக பார்த்து வந்தவன் நான். ஹீரோ சூர்யாவின் அப்பா என்றவுடன் பணக்காரன் என நினைத்துவிடாதீர்கள்.
நான் பிறந்தக் காலத்தில் பஞ்சம் உச்சத்தில் இருந்தது. உணவு தானியங்கள் விழையாது. அடிப்பிடிச்ச சோறு தான் எனது உணவு. மாடு இருந்ததால் சுத்தமான பால், தயிர் கிடைக்கும்.
இப்போது என் குழந்தைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால் ஸ்டார் ஹோட்டலில் போய் சாப்பிடுகிறார்கள். ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு வந்தால் 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. சண்டிகரிலிருந்து கன்னியாகுமரி வரை படிப்பதற்கு 7 ஆண்டுகள் ஆனது. அதற்கே 7450 ரூபாய் தான் ஆனது. அப்போ எவ்வளவு சிக்கனமாக இருந்திருக்கிறேன் என்று நினைத்து பாருங்கள்.
இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், சிவகுமார் நடிகரானவுடன் தான் பணக்காரன். வாழ்க்கையில் எவன் ஒருவனுக்கு தேவைக் குறைவோ, அவனே பெரிய செல்வந்தன். சென்னையில் ஒரு மாதத்தில் 85 ரூபாய் செலவு செய்து தங்கியிருக்கும் போது, இந்த உலகத்தை சுண்டு விரலால் சுழற்றுவேன் என்ற தைரியத்தில் இருந்தேன். இப்போது மகன்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆனால், சுண்டுவிரல் சிறிதாக தெரிகிறது. அப்படியென்றால் எவ்வளவு தைரியத்தில் இருந்திருக்கிறேன் பாருங்கள்.
இரண்டு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கல்வி, ஒழுக்கம் இரண்டு மட்டுமே உங்களைக் காப்பாற்றும். எந்த ஊர், அப்பா - அம்மா என்ன செய்றாங்க போன்ற எதையுமே கவலைப்படாதீர்கள். கல்வி, ஒழுக்கம் இந்த இரண்டு மட்டும் சரியாக இருந்தால், உலகத்தில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் போகலாம். உடம்பைப் பேணுங்கள். வாழ்வாங்கு வாழுங்கள்".
இவ்வாறு நடிகர் சிவக்குமார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.