Don't Miss!
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. நெல்லை கலெக்டர் அதிரடி.. உடனே சூழ்ந்த போலீஸ்! அடுத்து பரபர
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வடிவேலுவுக்கு நேரமே சரியில்லை: புலிகேசியை அடுத்து எலி பிரச்சனை
Recommended Video
சென்னை: வடிவேலுவுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.
24ம் புலிகேசி படத்தில் இருந்து வெளியேறிய வடிவேலுவிடம் ரூ. 9 கோடி நஷ்ட ஈடு கேட்டார் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர். தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் சமரசம் பேசியும் பலனில்லை.
இந்நிலையில் 24ம் புலிகேசி படத்தில் மீண்டும் நடிக்க வடிவேலு ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.
சட்டம்
ரூ. 9 கோடி நஷ்ட ஈடு கொடுக்காமல் ஷங்கரை சட்டப்படி சந்திக்கும் முடிவில் இருந்த வடிவேலு தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார். அவர் இறங்கி வராவிட்டால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருந்ததாம்.
எலி
புலிகேசி பிரச்சனை ஓய்ந்த கையோடு எலி பட பிரச்சனையில் சிக்கியுள்ளார் வடிவேலு. யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு, சதா நடித்த எலி படம் கடந்த 2015ம் ஆண்டு ரிலீஸாகி பிளாப் ஆனது.
நஷ்டம்
எலி படம் ஓடாததால் தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தார். முன்னதாக படத்தை தயாரிக்க வடிவேலுவின் பரிந்துரையில் சதீஷ் குமாருக்கு ராம் குமார் என்பவர் ரூ. 1.5 கோடி கடன் கொடுத்துள்ளார். சதீஷ் அசல் மற்றும் வட்டியை சேர்த்து ரூ. 2 கோடி கொடுக்கவில்லை.
தலைமறைவு
ராம்குமார் வடிவேலு மற்றும் சதீஷ் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் சதீஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே வடிவேலு தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரச்சனை
வடிவேலுவுக்கு நேரமே சரியில்லை. ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டே இருக்கிறார். கோலிவுட்டில் பெயரை கெடுத்துக் கொண்டாலும் அவரை திரையில் பார்க்கும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.