Don't Miss!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை?
வடிவேலு நடித்த எலி திரைப்படத்தில் தயாரிப்பாளர் சதீஷ், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: பண மோசடி வழக்கில் எலி திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ் கைது செய்யப்பட்டார்.
வடிவேலு நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் எலி. யுவன் தயாளன் இயக்கத்தில் வெளியான இப்படத்தை சதீஷ்குமார் என்பவர் தயாரித்து இருந்தார். இதற்காக வடிவேலு பரிந்துரையின் பேரில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த அவரது நண்பர் ராம்குமார் என்பவரிடம் ஒன்றரை கோடி ரூபாய் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
மொத்த தொகையாக 2 கோடி ரூபாய் திருப்பித் தருவதாகக் கூறிய சதீஷ்குமார், தற்போது வரை பணம் எதுவும் கொடுக்கவில்லை என கடந்த பிப்ரவரியில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரிடம் ராம்குமார் புகார் அளித்தார்.
இதை அடுத்து சதீஷ்குமார் தலைமறைவானார். சதீஷ்குமாரை தீவிரமாக தேடி வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மதுரையில் பதுங்கி இருந்த போது கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பணத்துக்கு உத்தரவாதம் கொடுத்த வடிவேலுவை போலீசார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் மதுரை அருகே தலைமறைவாக இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.