Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குறி பார்த்து சுடத் தவறிய தோட்டா.. கெளதம் மேனனே காரணம்.. தயாரிப்பாளர் அப்செட்!
சென்னை: என்னை நோக்கி பாயும் தோட்டா பட தோல்விக்கு இயக்குனர் கௌதம் மேனனின் கவனக்குறைவே காரணம் என்று தயாரிப்பாளர் ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்
எப்போது வரும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட என்னை நோக்கி பாயும் தோட்டா கடந்த 27ஆம் தேதி வெளிவந்தது. இதனால் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் ஹிட்டாகி அதிக அளவில் பேசப்பட்டது.
என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற பெயரே செம மாஸான பெயர் என்பதால் படம் செம சூப்பர் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும் பல, ஹிட் படங்களை கொடுத்த கௌதம் மேனன் மற்றும் தனுஸ் ஆகியோரின் மெகா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்த்தனர்.
திருமணமான பிரபல நடிகர் மீது எனக்கு க்ரஷ்.. ரித்திகாவின் பதிலால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆனால் நினைத்தபடி வெற்றி பெறாததால் ஏமாற்றமடைந்த தயாரிப்பாளர் கே.ராஜன் இந்த படம் தோல்வி அடைய இயக்குனர் கௌதம் மேனனின் கவனக்குறைவும் சரியில்லா திட்டமிடலும் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர் . பல வெற்றிப்படங்களை தந்த அவரால் ஏன் இப்படத்தை வெற்றிப்படமாக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
எல்.கே.ஜி ,கைதி மற்றும் அசுரன் போன்ற குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட பட்டங்களே மக்களால் ரசிக்க பட்டு மிகபெரிய வெற்றியடைந்து வியாபார ரீதியிலும் நல்ல பெயரை பெற்றுத்தந்தள்ளன. ஆனால், இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு தற்போது ரிலீஸான என்னை நோக்கி பாயும் தோட்ட படம் மிக பெரிய பேசப்படாததற்கு என்ன காரணம் என்ற புரியவில்லை கூறிய தயாரிப்பாளர் கே.ராஜன் இதற்கு கௌதம் தான் முழுக்க காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.