Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எந்திரன் 2 தொடக்க விழா எளிமையாக முடிந்ததா?
சென்னை: நடிகர் ரஜினி நடிக்கவிருக்கும் எந்திரன் 2 படத்தின் தொடக்க விழா இன்று எளிமையாக நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ரஜினி தற்போது பா.ரஞ்சித்தின் கபாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது பிறந்த நாள் தினத்தில் எந்திரன் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக எந்திரன் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தள்ளிப்போகலாம் என்று தகவல்கள் வெளியானது.(இதைப் பற்றி நாம் ஏற்கனவே மழையால் தள்ளிப்போகிறதா எந்திரன் 2 அறிவிப்பு? என்று செய்தி கொடுத்திருந்தோம்)
இந்நிலையில் இன்று மிக எளிமையாக இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொண்டு படத்தின் பூஜையை மிக எளிமையாக நடத்தி விட்டதாக கூறுகிறார்கள்.
வரும் 14ம் தேதி முதல் எந்திரன் 2 வின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ஜனவரி மாதத் தொடக்கம் அல்லது பொங்கல் கழித்து ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எந்திரன் 2 குறித்து இயக்குநர் ஷங்கர் இதுவரை எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.