Don't Miss!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
துபாயில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து திரும்பிய எனிமி படக்குழு
சென்னை : சக்ரா படத்திற்கு பிறகு விஷால் நடித்து வரும் படம் எனிமி. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
கடந்த மாதம் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் கடந்த மாதம் துபாயில் படமாக்கப்பட்டது. துபாயில் படப்பிடிப்பை முடித்து படக்குழு திரும்பி இருப்பதாக தயாரிப்பாளர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், சென்னையில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் மட்டும் மீதம் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. துபாயில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.
எனிமி படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். விஷாலும், ஆர்யாவும் இதற்கு முன் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இரும்புத்திரை படத்திலும் இவர்கள் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போனது.
சமீபத்தில் வெளியான ஆர்யா நடித்த டெடி படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த படமும் அவரை மாறுபட்ட கோணத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்க உதவும் என படக்குழு கருதுகிறது.
எனிமி படத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த மிருனாளினி ரவி ஹீரோயினாக நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம் தயாராகி வருகிறது.