Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அட இவங்க எல்லாம் இன்ஜினியரிங் படிப்பு படிச்ச நடிகர்களா?
சென்னை: முன்பெல்லாம் நடிகர் நடிகையர்களிடம் பேட்டி எடுக்கும் போது நடிக்க வராவிட்டால் என்று கேட்டால் இன்ஜினியர், டாக்டர் ஆகியிருப்பேன் என்று சொல்வார்கள். இப்போதோ நிறைய நடிகர்கள் இன்ஜினியரிங் படித்துவிட்டு நடிக்க வருகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நாட்டின் பொக்கிஷமாக கருதப்படும் சர்.விசுவேசுவரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியான நேற்று இந்தியா முழுவதும் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. அதே வேளையில் தமிழ் திரையுலகில் வலம் வரும் பொறியாளர்களையும் நாம் நினைவு கூரத்தக்கது அவசியமாகும்.
இந்தியாவின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை வகுத்து கொடுத்தவர், பல மிகப்பெரிய சாதனைகளை புரிந்தவர் சர்.விசுவேசுவரய்யா. அவருக்கு இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருதினை கடந்த 1955ஆம் ஆண்டில் வழங்கி கவுரவித்தனர். அந்த சாதனையாளரின் பிறந்த நாளே பொறியாளர் தினமாக இந்திய முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பொறியாளர்களின் அபாரமான சக்தி நமக்கு பல வழிகளில் உதவுகின்றன. அப்படி இருக்கையில் நமது தமிழ் சினிமாவில் பொறியாளர்கள் இல்லாமல் போய்விடுவார்களா என்ன.
இன்றைக்கு நம் தமிழ் சினிமாவை கலக்கி வரும் சில நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பொறியாளர்களாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்கள் என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும். ஆனால் நம்மில் பலருக்கு இந்த உண்மை தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் யார் என்று தெரிந்து கொண்டு அவர்களுக்கு நம்முடைய பொறியாளர் தின வாழ்த்தினை தெரிவிப்போம்.
தமிழ் சினிமாவில் நடிகர்களில் சிவகார்த்திகேயன், பிரசன்னா, ஆர்யா, கார்த்தி, கணேஷ் வெங்கட்ராமன், கார்த்திக்குமார், நடிகைகளில் டாப்ஸீ பன்னு, கனிகா, பாடகர்களில் ஷங்கர் மகாதேவன், இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, அருண்ராஜா காமராஜ் போன்றவர்கள் பொறியாளர் படிப்பை முடித்து விட்டு, பின்னர் தங்கள் கனவான சினிமா துறையில் அடியெடுத்து வைத்துள்ளனர். அவர்களின் விடா முயற்சியும் திறமையும் தான் அவர்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.
தமிழ் சினிமாவிற்கு இவர்களின் பங்களிப்பு மிகுதியானது. இவர்கள் திரைத்துறைக்கு வராமல் பொறியாளர்களாக சாதித்திருந்தால் நாம் எத்தனையோ திறமைசாலிகளை இழந்திருப்போம். பொறியியல் படித்த அனைத்து பொறியாளர்களுக்கு ஃபிலிமிபீட் சார்பாக மனம் கனிந்த பொறியாளர்தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிளோம்.