Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'இந்தி, இங்க்லீஷ் படங்கள்ல மதிக்கற நீங்க என் மகன் படத்தை கண்டுக்கலையே' புலம்பும் டெல்லி கணேஷ்
சென்னை: நடிகரும், என்னுள் ஆயிரம் படத்தின் தயாரிப்பாளருமான நடிகர் டெல்லி கணேஷ் பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ் ஆப்பில் உலா வந்து கொண்டிருக்கிறது.
அதில் 'தமிழ் வாழ்க, தமிழன் வாழ்க என்று சொல்லுகிறார்கள். ஆனால் தமிழ்ப்படங்களுக்கு ஒரு ஷோ தியேட்டரில் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
இந்திப் படம், தெலுங்குப் படம், இங்க்லீஷ் கார்ட்டூன் படம் இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் தமிழ்ப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
திருச்சியில் என் படம் ரிலீஸ் ஆகவில்லை. மற்ற மாவட்டங்களில் சிறிய தியேட்டர்கள் மட்டுமே கிடைத்தது. நான் ஒரு ரிலீஸ் தேதி முடிவு செய்தால் அந்தத் தேதிகளில் 'தெறி' வருது அது இது என காரணம் காட்டி ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றார்கள்.
ஒருவழியாக 22 ம் தேதி வெளியிட்டால் நீங்க ஒரு 29 ம் தேதி வந்திருக்கலாமே என்று கூறுகிறார்கள். மொத்தத்தில் ஒரு படம் எடுத்து வெளியிட்ட காரணத்தால் நான் பைத்தியக்காரனாகவே ஆகிவிட்டேன்.
சினிமாத் துறையில் இத்தனை வருடத்தில் கற்றுக்கொள்ளாததை இப்போது கற்றுக் கொண்டேன்" என்று நொந்துபோய் கூறியிருக்கிறார்.
அதேநேரம் மகனின் ஹீரோ ஆசையை நிறைவேற்றத்தானே படமெடுத்தீர்கள்? என்று டெல்லி கணேஷ் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ளன.