Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கேளிக்கை வரி போட்டாச்சு... இன்னும் உயர்கிறது சினிமா டிக்கெட் விலை!
சென்னை : தமிழகத்தில் ஜி.எஸ்.டி-யோடு சேர்த்து விதிக்கப்பட்ட 30% கேளிக்கை வரியை எதிர்த்து திரைத்துரையினர் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் திரையரங்குகள் மூடப்பட்டன.
பிறகு அந்த கேளிக்கை வரி அமலாகாமல் இருந்தது. இந்நிலையில், திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கேளிக்கை வரி தற்போது 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இப்போது வரை 30% ஆக இருந்த கேளிக்கை வரி தற்போது 20% குறைக்கப்பட்டு 10% ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது செப்டம்பர் 27-ம் தேதியை முன்தேதியிட்டு தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது.
தமிழ் படங்களுக்கு :
புதிய தமிழ் படங்களுக்கு 10% வரியும், மற்ற மொழிப் படங்களுக்கு 20% கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு 7% கேளிக்கை வரியும், மற்ற மொழித் திரைப்படங்களுக்கு 14% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
விலை உயரும் :
ஜி.எஸ்.டி அமலுக்கு வந்ததில் இருந்து கேளிக்கை வரி சேர்க்கப்படாமலேயே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது இந்த கேளிக்கை வரியும் சேர்க்கப்பட உள்ளதால் டிக்கெட் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜி.எஸ்.டி-யால் விலை உயர்வு :
ஏற்கெனவே ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டபோது, மல்டிஃப்ளெக்ஸ் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் வில்லை 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகரித்தது. சினிமா ரசிகர்கள் அதைக் குறைக்கும்படி வலியுறுத்தி வரும்போது மீண்டும் உயர இருக்கிறது.
தியேட்டர்கள் முடிவு :
வரும் புதன்கிழமை நடைபெறும் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்திற்கு பிறகு கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.