Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கேளிக்கை வரி போட்டாச்சு... இன்னும் உயர்கிறது சினிமா டிக்கெட் விலை!
சென்னை : தமிழகத்தில் ஜி.எஸ்.டி-யோடு சேர்த்து விதிக்கப்பட்ட 30% கேளிக்கை வரியை எதிர்த்து திரைத்துரையினர் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் திரையரங்குகள் மூடப்பட்டன.
பிறகு அந்த கேளிக்கை வரி அமலாகாமல் இருந்தது. இந்நிலையில், திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கேளிக்கை வரி தற்போது 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இப்போது வரை 30% ஆக இருந்த கேளிக்கை வரி தற்போது 20% குறைக்கப்பட்டு 10% ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது செப்டம்பர் 27-ம் தேதியை முன்தேதியிட்டு தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது.
தமிழ் படங்களுக்கு :
புதிய தமிழ் படங்களுக்கு 10% வரியும், மற்ற மொழிப் படங்களுக்கு 20% கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு 7% கேளிக்கை வரியும், மற்ற மொழித் திரைப்படங்களுக்கு 14% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
விலை உயரும் :
ஜி.எஸ்.டி அமலுக்கு வந்ததில் இருந்து கேளிக்கை வரி சேர்க்கப்படாமலேயே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது இந்த கேளிக்கை வரியும் சேர்க்கப்பட உள்ளதால் டிக்கெட் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜி.எஸ்.டி-யால் விலை உயர்வு :
ஏற்கெனவே ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டபோது, மல்டிஃப்ளெக்ஸ் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் வில்லை 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகரித்தது. சினிமா ரசிகர்கள் அதைக் குறைக்கும்படி வலியுறுத்தி வரும்போது மீண்டும் உயர இருக்கிறது.
தியேட்டர்கள் முடிவு :
வரும் புதன்கிழமை நடைபெறும் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்திற்கு பிறகு கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.