Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இழுத்தடிக்கும் எந்திரன் வழக்கு: ஷங்கருக்கு ரூ. 10,000 அபராதம் விதித்த ஹைகோர்ட்
சென்னை: எந்திரன் பட வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் எந்திரன். அந்த படத்தின் கதை தன்னுடையது என்று கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2010ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
தனது கதையை திருடி படம் எடுத்ததற்காக தனக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் ஷங்கர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம். சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஷங்கர் ஆஜராகவில்லை. மேலும் அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞரோ வழக்கு விசாரணை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரினார்.
வழக்கை தள்ளி வைக்க மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ஷங்கர் வேண்டும் என்றே வழக்கை இழுத்தடிப்பதாக அவர் கூறினார்.
விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி நேரில் ஆஜராகாத ஷங்கருக்கு ரூ. 10 ஆயிரம்(வழக்கு செலவு) அபராதம் விதித்தார். இந்த தொகையை அவர் வரும் 10ம் தேதிக்குள் விலங்குகள் நல அமைப்பான ப்ளூகிராஸில் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.