கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்.. நான்கு நாட்கள் நடக்கிறது!
ரஜினியின் கோச்சடையான் படம் வெளியாவதையொட்டி, ஒரு பசுமைத் தொடர் ஓட்டத்துக்கு அதன் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்..

மே 18-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் ஓட்டம் நான்கு தினங்கள் நடைபெறுகிறது. இதற்கு கோச்சடையான் பசுமைத் தொடர் ஓட்டப் போட்டி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடக்கும் இந்த ஓட்டத்தில் ரஜினியின் ரசிகர்கள் திரளாகப் பங்கெடுத்துள்ளனர்.

புவியைக் காக்க மரங்களைப் பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த தொடர் ஓட்டம் நடக்கிறது.
'மரங்களை நடுவோம்.. இயற்கையைப் பராமரிப்போம்' என்ற கோஷத்தை முழக்கியபடி இந்த ஓட்டத்தை முன்னெடுத்துள்ளனர் ரசிகர்கள்.

கோச்சடையான் வரும் மே 23-ம் தேதி உலகெங்கும் 6000 அரங்குகளில் வெளியாகிறது. ஒரு பக்கம் சமூக விழிப்புணர்வு, இன்னொரு பக்கம் படத்துக்கான விளம்பரம் என்பதால், இந்த பசுமைத் தொடர் ஓட்டத்தை சீரியசாக நடத்துகிறது ஈராஸ் நிறுவனம்.


Click it and Unblock the Notifications











