Don't Miss!
- News கோவையில் மறுவாக்குப்பதிவு நடத்தணும்.. 1 லட்சம் வாக்குகளை காணோம்.. அண்ணாமலை பரபர புகார்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்.. நான்கு நாட்கள் நடக்கிறது!
ரஜினியின் கோச்சடையான் படம் வெளியாவதையொட்டி, ஒரு பசுமைத் தொடர் ஓட்டத்துக்கு அதன் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்..
மே 18-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் ஓட்டம் நான்கு தினங்கள் நடைபெறுகிறது. இதற்கு கோச்சடையான் பசுமைத் தொடர் ஓட்டப் போட்டி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடக்கும் இந்த ஓட்டத்தில் ரஜினியின் ரசிகர்கள் திரளாகப் பங்கெடுத்துள்ளனர்.
புவியைக் காக்க மரங்களைப் பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த தொடர் ஓட்டம் நடக்கிறது.
'மரங்களை நடுவோம்.. இயற்கையைப் பராமரிப்போம்' என்ற கோஷத்தை முழக்கியபடி இந்த ஓட்டத்தை முன்னெடுத்துள்ளனர் ரசிகர்கள்.
கோச்சடையான் வரும் மே 23-ம் தேதி உலகெங்கும் 6000 அரங்குகளில் வெளியாகிறது. ஒரு பக்கம் சமூக விழிப்புணர்வு, இன்னொரு பக்கம் படத்துக்கான விளம்பரம் என்பதால், இந்த பசுமைத் தொடர் ஓட்டத்தை சீரியசாக நடத்துகிறது ஈராஸ் நிறுவனம்.