Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஈஸ்வரும் மகாலட்சுமியும் லவ் யூ சொல்லி முத்தம் கொடுத்து கொண்டார்கள்.. புட்டு புட்டு வைத்த ஜெயஸ்ரீ!
Recommended Video
சென்னை: நடிகை மகாலட்சுமியும் எனது கணவர் ஈஸ்வரும் லவ் யூ சொல்லி முத்தம் கொடுத்துக் கொண்டார்கள் என சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
சீரியல் நடிகை ஜெயஸ்ரீயின் பிரச்சனைதான் தற்போது டாக் ஆஃப் த டவுனாக உள்ளது. வம்சம் சீரியலில் நடித்த நடிகை ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார்.
மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டார் என்றும் குற்றம்சாட்டினர்ர். அதோடு அவர்கள் இணைந்து எடுத்த போட்டோக்களையும் வெளியிட்டார்.
கொஞ்சல் சேட்
aமகாலட்சுமியும் ஈஸ்வரும் பேஸ்புக்கில் பையா பப்பு என கொஞ்சிக்கொண்ட சாட்டின் ஸ்க்ரீன் ஷாட்டும் வைரலானது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ செய்தியாளர்களை சந்தித்தார்.
லவ் யூ சொல்லி முத்தம்
அப்போது ஈஸ்வர் - மகாலட்சுமி இடையே நடந்த சாட் ரெக்கார்டுகள் மற்றும் ஈஸ்வர் தனக்கு மெசேஜ் அனுப்பிய சாட் ரெக்கார்டுகளை செய்தியாளர்களுக்கு காண்பித்தார். தொடர்ந்து பேசிய ஜெயஸ்ரீ, மகாலட்சுமியும் என் கணவரும் லவ் யூ சொல்லி முத்தம் கொடுத்துக்கொண்டார்கள். நண்பர்கள் லவ் யூ சொல்லி முத்தம் கொடுத்துக்கொள்வார்களா?
வேண்டாம் என்கிறாரே
என் வாழ்க்கையில் பிரச்சனை செய்யாதே, இதோடு நிறுத்திக்கொள் என்று மகாலட்சுமியிடம் கேட்டேன். அதற்கு அவர்தான் உன்னை வேண்டாம் என்கிறாரே நீ போக வேண்டியதுதானே என என்னை கேட்டார்.
நான்தான் டிஸைட் பண்ணுவேன்
அதையெல்லாம் டிசைட் பண்ண நீ யார் என்று கேட்டதற்கு, இனிமே எல்லாத்தையும் நான்தான் டிஸைட் பண்ணப்போகிறேன் என்று கூறுகிறார். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.
நான் பெயிலில் எடுத்தேன்
என் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்தாரோ அதையேதான் இப்போது மகாலட்சுமிக்கும் செய்து வருகின்றார். நான் என் முன்னாள் கணவருடன் விவாகரத்து பிரச்சனையில் இருந்தபோது, அவரை அடித்தார், அதனால் கைது செய்யப்பட்ட அவரை நான்தான் பெயிலில் எடுத்தேன்.
மகாலட்சுமியின் மகன்
என் குழந்தையுடன் எப்படி டைம் ஸ்பென்ட் பண்ணி அவளை அப்பா என அழைக்க வைத்தாரோ அதேபோல் மகாலட்சுமியின் குழந்தையுடனும் பழகி தன்னை அப்பா என அழைக்கசொல்கிறார். இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.
குழந்தையை பேச வைத்து
எனது குழந்தைக்கு பேச சொல்லிக்கொடுத்து ஆடியோ ரிலீஸ் செய்துள்ளார். நான் அவர்கள் லைவாக பேசுவதை ரெக்கார்டு செய்து ஆடியோ வெளியிட்டேன், ஆனால் அவர் என் குழந்தை தனியாக அழைத்து சென்று பேச வைத்து ரெக்கார்டு செய்து ஆடியோ ரிலீஸ் செய்திருக்கிறார்.
ஃபீஸ் கட்ட முடியாது
அனைத்துக்கும் என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. என் குழந்தை என்கிறார். ஆனால் எனக்கு உன் குழந்தைக்கு என்னால் ஃபீஸ் கட்டமுடியாது என்று கூறுகிறார். இதுவும் என புரியவில்லை. இவ்வாறு சீரியல் நடிகை ஜெயஸ்ரீ செய்தியாளர்களிடம் பேசினார்.