Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இருக்கைகளுக்கான அனுமதி வாபஸானால்.. மாஸ்டர் மட்டும்தான்.. ஈஸ்வரன் இல்லை.. திருப்பூர் சுப்பிரமணியன்!
சென்னை: திரையரங்குகளில் 100 % இருக்கைகளுக்கான அனுமதி வாபஸ் பெறப்பட்டால் மாஸ்டர் படம் மட்டுமே ரிலீஸ் ஆகும் என திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.
கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.
ஜனவரி 13ஆம் தேதி
இந்நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நவம்பர் 10-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக அண்மையில் அறிவித்தது.
படத்தின் ரிலீஸ் தகவல்
ஆனால் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை அறிவித்த கையோடு நடிகர் விஜய் தமிழக முதல்வரை சந்தித்து திரையரங்குகளில் 100% இருக்கைகளை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
100% இருக்கைகளுக்கு அனுமதி
இதேபோல் நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டதால் நடிகர் சிம்புவும் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதினார். இருவரின் கோரிக்கையையும் ஏற்ற தமிழக அரசு, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தது.
மத்திய அரசு எதிர்ப்பு
ஆனால் தமிழக அரசின் அறிவிப்புக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். இந்த அனுமதியை மறுபரிசீலனை செய்யுமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் 50% இருக்கைகள்
இதனால் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இதுதொடர்பாக வழக்கு ஒன்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈஸ்வரன் இல்லை
இந்நிலையில் 100% இருக்கைகளுக்கு அனுமதி என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றால் வரும் பொங்கல் திருநாளில் 'மாஸ்டர்' திரைப்படம் மட்டுமே வெளியிடப்படும் என்றும் ஈஸ்வரன் படம் வெளியிடப்படாது என்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்
சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த அறிவிப்பால் சிம்புவின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் நாளில் ஈஸ்வரன் படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.