Don't Miss!
- News நான் கொஞ்சம் பிசி.. இப்போதைக்கு நோ! பிரதமர் மோடி சந்திப்பை ஒத்தி வைத்த எலான் மஸ்க்! இதுதான் காரணமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அசுரவேகத்தில் இணையத்தில் லீக்கான எதற்கும் துணிந்தவன்.. படக்குழு அதிர்ச்சி !
சென்னை : சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இணையத்தில் வெளியான சம்பவம் படக்குழுவையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸானது.
குத் வித் கோமாளி 3 ல் என்ட்ரி கொடுக்கும் டாப் ஹீரோ... சர்ப்ரைஸ் ஆன ரசிகர்கள்
இந்த படத்திற்கு யூடியூப் விமர்சகர்கள், ஊடகங்கள் மற்றும் இணைய தளங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறிவருகின்றனர்.
எதற்கும் துணிந்தவன்
எதற்கும் துணிந்தவன் சூர்யாவின் 40வது திரைப்படமாகும். இந்த படத்தில் சூர்யாவோடு சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், பிரியங்கா மோகன், வினய், புகழ் மற்றும் சூரி ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு
சூர்யா நடிப்பில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகிவுள்ளது. இதற்கு முன்பு அவரின் நடிப்பில் வெளியாகியிருந்த சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும், ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. காப்பான் திரைப்படத்துக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் சூர்யாவின் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
பான் இந்திய திரைப்படம்
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் பான் இந்தியத் திரைப்படமாக இப்படம் வெளியாகி உள்ளது. நேற்று காலை வெளியான இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நேரத்தில், படம் வெளியான முதல் நாளே தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.
Recommended Video
இணையத்தில் லீக்கானது
நெட்டில் படம் திருட்டுத்தனமாக வெளியானது படக்குழுவுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடையை மீறி படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளதை அடுத்து, தயாரிப்பு நிறுவனம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான லீக் காட்டுத்தீ போல் பரவியதால், அனைவரும் படத்தை டவுன்லோடு செய்யத் தொடங்கிவிட்டனர். இன்னும் சிலம் HD Print கிடைக்குமா பாஸ் என்று கேட்டு வருகின்றனர்.