Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெண்களுடன் சினேகன் குத்தாட்டம் போட்ட எவனும் புத்தனில்லை!
சென்னை: எவனும் புத்தனில்லை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.
வி சினிமா குளோபல் நெட்வொர்க் தயாரிப்பில் இயக்குனர் எஸ்.விஜயசேகரன் இயக்கியுள்ள திரைப்படம் எவனும் புத்தனில்லை.
இத்திரைப்படத்தில் நபி நந்தி, சரத் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா நடித்துள்ளனர். கவுரவ வேடத்தில் கவிஞர் சினேகன் மற்றும் பூனம் கவூர் நடித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கட்டிப்பிடி வைத்தியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற சினேகன், இப்படத்தில் 200 நடனக் கலைஞர்களுடன் மாஸ் ஆட்டம் போட்டுள்ளார். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, சிங்கமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் சென்னையில் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய இயக்குனர், ஆறாயிரம் அடி உயர மலைகிராமத்தில் வாழும் மக்களைப் பற்றிய கதை என்றும், அவர்களுக்கு ஆதரவாக வாழும் இளைஞன் தான் ஹீரோ எனக் கூறினார்.
அடிப்படை வசதியே இல்லாத மலை கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியதாகவும், படம் முடியும் வரை வேறு எந்த வேலைகளும், கமிட்மெண்டுகளும் இல்லாதவர்தான் பண்ண முடியும் என்பதால், சரத் மற்றும் நபி நந்தி ஆகியோரை தேர்வு செய்து படத்திற்காக தயார் செய்தோம் எனக் கூறினார்.
இப்படத்திற்கு ராஜா சி.சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் அர்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மரியா மனோகர் இசையில் கவிஞர் சினேகன் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.