Don't Miss!
- News பரம்பரை வரி விதிப்போம் என்கிறது காங்கிரஸ்.. கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை பறிக்க முயற்சி! விடாத மோடி
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
3 வருஷம் காணாமல் போய்விட்டேன்.. தயாரிப்பாளர் மகனா இருந்தாலும் உழைப்புதான் வேணும்.. ஜெயம் ரவி பளீச்!
சென்னை : நடிகர் ஜெயம் ரவி சிறப்பான நடிகராக கோலிவுட்டில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார்.
Recommended Video
அவரது பொன்னியின் செல்வன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
படத்தில் அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது.
என்னது வனிதா விஜயக்குமார் கர்ப்பமா...பகீர் கிளப்பிய ரசிகர்கள்...அவரே சொன்ன விளக்கம் இதோ
நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2003ல் வெளியான ஜெயம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, தனி ஒருவன் என தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இந்திய அளவில் காணப்படுகின்றனர்.
தனி ஒருவன் படம்
குறிப்பாக அரவிந்த் சாமியுடன் இவர் இணைந்து நடித்திருந்த தனியொருவன் படம் இவருக்கு சைமா விருதை பெற்றுத் தந்துள்ளது. நயன்தாரா ஜோடி சேர்ந்திருந்த இந்தப் படம் ஜெயம் ரவியின் கேரியர் பெஸ்ட் படமாக அமைந்திருந்தது. சிறப்பான இந்தக் கேரக்டருக்கு அரவிந்த் சாமியின் வில்லத்தனம் சிறப்பான வலிமையை கொடுத்திருந்தது.
ஜெயம் ரவி விளக்கம்
இந்நிலையில் விருது வழங்கும் விழா மேடையில் ஜெயம் ரவி பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விழாவில் பேசிய ஜெயம் ரவி, முன்னதாக பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார். நாம் சிறப்பான நிலையை அடைய முக்கிய தேவை என்ன என்பது குறித்து அவர் பதிலளித்தார்.
கடுமையான உழைப்பு
முன்னதாக பேசிய விக்னேஷ் சிவன், தான் வாய்ப்புக்களை பெருவதற்கு மிகுந்த சிரமப்பட்டதாகவும் அசிஸ்டெண்ட் இயக்குநராக இருந்து சான்ஸ் கேட்டு முன்னுக்கு வந்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஜெயம் ரவி, தயாரிப்பாளர் மகன் என்பதால் மட்டுமே தான் முன்னுக்கு வரவில்லை என்றும் மிகவும் கடினமான உழைப்பே தன்னை முன்னேற்றியது என்றும் குறிப்பிட்டார்.
3 வருடங்கள் காணாமல் போனேன்
திரையுலகில் 3 வருடங்கள் தான் காணாமல் போனதாகவும் அப்போதும் தான் கடினமாகவே உழைத்ததாகவும் தெரிவித்தார். அதன்பிறகு இந்த கடின உழைப்பையே தான் கொடுத்தாலும் எதற்காக உழைக்கிறோம் என்ற புரிதலுடன் தான் உழைத்ததாகவும் அந்த புரிதலே தனக்கு தனி ஒருவன் படத்திற்காக விருதை பெற்றுத் தந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
காமெடி செய்த ஜெயம் ரவி
தொடர்ந்து படக்குழுவினரை பாராட்டிய ஜெயம் ரவியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் சிவா எச்சரித்தார். மனைவியை பாராட்டாமல் விட்டுவிட்டால் சோறு கிடைக்காது என்று தெரிவித்தார். இதை உடனடியாக சமாளித்த ஜெயம் ரவி அவருக்கு பாராட்டு தெரிவித்தார். அவரின் இந்த சமாளிப்பை அல்லு அர்ஜூன், நயன்தாரா உள்ளிட்டவர்கள் மிகவும் ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
பொன்னியின் செல்வன் படம்
தற்போது ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. வரும் செப்டம்பரில் இவரது பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகவுள்ளது. இதில் அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து அவரது அகிலன், இறைவன் ஆகிய படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
-
தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!