twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    3 வருஷம் காணாமல் போய்விட்டேன்.. தயாரிப்பாளர் மகனா இருந்தாலும் உழைப்புதான் வேணும்.. ஜெயம் ரவி பளீச்!

    |

    சென்னை : நடிகர் ஜெயம் ரவி சிறப்பான நடிகராக கோலிவுட்டில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார்.

    Recommended Video

    Ravi Raghavendra | Rocketry படத்துக்கு மாதவனுக்கு கண்டிப்பா National Award கிடைக்கும் | *Interview

    அவரது பொன்னியின் செல்வன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

    படத்தில் அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது.

    என்னது வனிதா விஜயக்குமார் கர்ப்பமா...பகீர் கிளப்பிய ரசிகர்கள்...அவரே சொன்ன விளக்கம் இதோ என்னது வனிதா விஜயக்குமார் கர்ப்பமா...பகீர் கிளப்பிய ரசிகர்கள்...அவரே சொன்ன விளக்கம் இதோ

    நடிகர் ஜெயம் ரவி

    நடிகர் ஜெயம் ரவி

    நடிகர் ஜெயம் ரவி கடந்த 2003ல் வெளியான ஜெயம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, தனி ஒருவன் என தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இந்திய அளவில் காணப்படுகின்றனர்.

    தனி ஒருவன் படம்

    தனி ஒருவன் படம்

    குறிப்பாக அரவிந்த் சாமியுடன் இவர் இணைந்து நடித்திருந்த தனியொருவன் படம் இவருக்கு சைமா விருதை பெற்றுத் தந்துள்ளது. நயன்தாரா ஜோடி சேர்ந்திருந்த இந்தப் படம் ஜெயம் ரவியின் கேரியர் பெஸ்ட் படமாக அமைந்திருந்தது. சிறப்பான இந்தக் கேரக்டருக்கு அரவிந்த் சாமியின் வில்லத்தனம் சிறப்பான வலிமையை கொடுத்திருந்தது.

    ஜெயம் ரவி விளக்கம்

    ஜெயம் ரவி விளக்கம்

    இந்நிலையில் விருது வழங்கும் விழா மேடையில் ஜெயம் ரவி பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விழாவில் பேசிய ஜெயம் ரவி, முன்னதாக பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார். நாம் சிறப்பான நிலையை அடைய முக்கிய தேவை என்ன என்பது குறித்து அவர் பதிலளித்தார்.

    கடுமையான உழைப்பு

    கடுமையான உழைப்பு

    முன்னதாக பேசிய விக்னேஷ் சிவன், தான் வாய்ப்புக்களை பெருவதற்கு மிகுந்த சிரமப்பட்டதாகவும் அசிஸ்டெண்ட் இயக்குநராக இருந்து சான்ஸ் கேட்டு முன்னுக்கு வந்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஜெயம் ரவி, தயாரிப்பாளர் மகன் என்பதால் மட்டுமே தான் முன்னுக்கு வரவில்லை என்றும் மிகவும் கடினமான உழைப்பே தன்னை முன்னேற்றியது என்றும் குறிப்பிட்டார்.

    3 வருடங்கள் காணாமல் போனேன்

    3 வருடங்கள் காணாமல் போனேன்

    திரையுலகில் 3 வருடங்கள் தான் காணாமல் போனதாகவும் அப்போதும் தான் கடினமாகவே உழைத்ததாகவும் தெரிவித்தார். அதன்பிறகு இந்த கடின உழைப்பையே தான் கொடுத்தாலும் எதற்காக உழைக்கிறோம் என்ற புரிதலுடன் தான் உழைத்ததாகவும் அந்த புரிதலே தனக்கு தனி ஒருவன் படத்திற்காக விருதை பெற்றுத் தந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

     காமெடி செய்த ஜெயம் ரவி

    காமெடி செய்த ஜெயம் ரவி

    தொடர்ந்து படக்குழுவினரை பாராட்டிய ஜெயம் ரவியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் சிவா எச்சரித்தார். மனைவியை பாராட்டாமல் விட்டுவிட்டால் சோறு கிடைக்காது என்று தெரிவித்தார். இதை உடனடியாக சமாளித்த ஜெயம் ரவி அவருக்கு பாராட்டு தெரிவித்தார். அவரின் இந்த சமாளிப்பை அல்லு அர்ஜூன், நயன்தாரா உள்ளிட்டவர்கள் மிகவும் ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

    பொன்னியின் செல்வன் படம்

    பொன்னியின் செல்வன் படம்

    தற்போது ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. வரும் செப்டம்பரில் இவரது பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகவுள்ளது. இதில் அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து அவரது அகிலன், இறைவன் ஆகிய படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

    English summary
    Actor Jayam ravi revealed the reason behind his success
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X