இந்த படம் பார்த்து விஜய் சிரித்தால் சிரித்து, அழுதால் அழுது, ஆடினால் ஆடியது எத்தனை பேர்?
Recommended Video

சென்னை: துள்ளாத மனமும் துள்ளும் பட பாடல்களை இன்று கேட்டால் கூட மனதிற்கு அவ்வளவு ஆறுதலாக இருக்கும்.
எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. விஜய்யின் கெரியரில் முக்கியமான படம்.
அவரால் என்றுமே மறக்க முடியாது படம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல்
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே ரசிக்கும் ரகம் தான். அதில் இன்னிசை பாடி வரும் பாடலை விஜய் சந்தோஷமாக பாடும் போது நம்மை அறியாமல் மகிழ்வோம். அவர் கடைசி காட்சியில் போலீஸ் ஜீப்பில் சாய்ந்தபடி பாடும்போது நம்மை அறியாமலேயே கண்ணில் கண்ணீர் எட்டிப்பார்க்கும்.
கொண்டாட்டம்
காதலை கொண்டாட எத்தனையோ பாடல்கள் வந்திருக்கலாம் ஆனால் மேகமாய் வந்து போகிறேன் பாடலுக்கு காதலர்கள் மத்தியில் தனி மதிப்பு உண்டு. தொடு தொடு எனவே பாடலை பார்த்தால் காதலி மீது இந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கும் காதலன் கிடைப்பது அரிது அரிது மிகவும் அரிது என்றே தோன்றும்.

இருபது கோடி
காக்கைச் சிறிகினிலே பாடலில் விஜய்யை பார்த்து ஃபீல் பண்ணாதவர்கள் இல்லை. இருபது கோடி நிலவுகள் பாடலை பார்த்து தங்களை விஜய், சிம்ரன் இடத்தில் வைத்து கற்பனை செய்தவர்கள் பலர். பளபளக்குது புது நோட்டு பாடல் இன்றும் அனைவரையும் ஆட்டம் போட வைக்கிறது.

தளபதி
விஜய்யை வெறுப்பவர்களால் கூட இந்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தை வெறுக்க முடியாது. அந்த படத்தை பார்க்கும் போது எல்லாம் விஜய்யையும், சிம்ரனையும் பார்த்து ரசிக்கத் தான் தோன்றுமே தவிர கலாய்க்கத் தோன்றாது. துள்ளாத மனமும் துள்ளும் படத்தை ஒரு முறை பார்த்தால் போதும் அவர்கள் நிச்சயம் விஜய் ரசிகன் அல்லது ரசிகையாகிவிடுவார்கள்.

சிரிப்பு
விஜய் பன்ச் வசனம் பேசி ஆக்ரோஷமாக சண்டை போடுவதை விட அவரின் சின்ன சிரிப்பு தான் அழகு. முன்பு விஜய்யின் கன்னம் பூரி போன்று இருந்ததும் கூட அவருக்கு தனி அழகு தான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


Click it and Unblock the Notifications