Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அஜீத் ரசிகர் இல்லாதவர்கள் கூட அவரின் ரசிகர்கள் ஆகிவிடுவார்கள்: சிவா
சென்னை: அஜீத்துடன் பேசினால் அவரது ரசிகர் இல்லாதவர்கள் கூட அவரின் ரசிகராகிவிடுவார்கள் என இயக்குனர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படம் நாளை ரிலீஸாக உள்ளது. அனிருத் தெறிக்கும் இசையமைத்துள்ளார் என்று சிவா பெருமையாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் படம் பற்றியும், அஜீத் பற்றியும் கூறுகையில்,
தர லோக்கல்
வேதாளம் படத்தில் அஜீத்தின் கதாபாத்திரம் தர லோக்கலாக இருக்கும். அவர் வடசென்னையைச் சேர்ந்தவராக நடித்துள்ளார். அவரது பாஷையும் அப்படியே இருக்கும்.
அஜீத்
ஒரு ரசிகனுக்கு தான் தனக்கு பிடித்த நடிகரை திரையில் எப்படி காட்ட வேண்டும் என்பது நன்கு தெரியும். நான் அஜீத் ரசிகன் ஆகிவிட்டேன். அஜீத்துடன் பேசினால் அவரது ரசிகர் இல்லாதவர் கூட ரசிகர் ஆகிவிடுவார். நான் சூப்பர்ஸ்டார்களின் ரசிகன். எம்.ஜி.ஆர்., ரஜினியை பார்த்து வளர்ந்தேன்.
கமர்ஷியல் படங்கள்
ரசிகர்களை தங்களின் கவலையை மறந்து படம் பார்க்க வைக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அவர்கள் படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் செல்ல வேண்டும். முடிந்தால் என் வாழ்க்கை முழுவதும் கமர்ஷியல் படம் எடுப்பேன்.
அனிருத்
அனிருத் ஒரு பக்கா தல வெறியன். நான் அவரிடம் கதையை கூறியபோது ஒரு தீவிர அஜீத் ரசிகன் கதையை கேட்பது போன்று கேட்டார். அவர் சிறப்பாக இசையமைத்துள்ளார் என்றார் சிவா.