திரைத் துளி
2002ல் தமிழ்த் திரையுலகம் சில மறக்க முடியாத நிகழ்வுகளையும் சந்தித்தது. இந்த நிகழ்வுகள் பலருக்கு கசப்பான அனுபவங்களாகவும் அமைந்தது.
- காவிரிப் பிரச்சினைக்காக இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரையுலகமே ஒன்று திரண்டு, நெய்வேலியில் மாபெரும் பேரணி மற்றும் கூட்டத்தை நடத்தியது தமிழக திரையுலக வரலாற்று நிகழ்ச்சியில் மறக்க முடியாத ஒன்று.
- காவிரிப் பிரச்சினையில் ரஜினிகாந்த் தனிமைப்படுத்தப்பட்டார். கர்நாடகத்திற்கு ஆதரவாகவும், தமிழக விவசாயிகள் நலனுக்கு விரோதமாகவும் அவர் நடப்பதாக முத்திரை குத்தப்பட்டது. ரஜினியை விமர்சித்து பேச்சுக்கள் எழுந்தன.
- அக்டோபர் 13ம் தேதி ரஜினிகாந்த் காவிரிப் பிரச்சினைக்காக சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்தார். அவரை வாழ்த்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் திரண்டு வந்தனர். நதிகள் இணைப்புக்கு இயக்கம் தொடங்குவதாகவும் அதற்காக ரூ. 1 கோடி தருவதாகவும் அறிவித்த ரஜினி, சமீபத்தில் அதையெல்லாம் செய்யப் போவதில்லை என்று சொல்லி ஒதுங்கிகி கொண்டார்.
More from Filmibeat
actor chennai chest pain cinema glamour heart attack hospital major sundararajan neyveli protest rajini fast sex sham sneha tamil news tamilnadu thatstamil


Click it and Unblock the Notifications











