Don't Miss!
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இனி ஆறு மாதத்துக்கு ஒரு படம்... சிவகார்த்திகேயனின் புது ரூட்டு!
மிஸ்டர் லோக்கல் திரைப்படம் முழுக்க முழுக்க ரசிகர்களை மகிழ்விக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: இனி ஆறு மாதத்துக்கு ஒரு படம் தருவேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ளப் படம் மிஸ்டர் லோக்கல். ரோபோ சங்கர், யோகி பாபு, சதீஷ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மிஸ்டர் லோக்கல் படம் வரும் 17ம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இனி ஆறு மாதத்துக்கு ஒரு படம் தருவேன் எனக் கூறினார்.
பாவம் அதர்வா, இப்படி சோதனை மேல் சோதனையா?
மகிழ்விக்கும் மிஸ்டர் லோக்கல்
இதுகுறித்து அவர் பேசியதாவது, " மிஸ்டர் லோக்கல் திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தின் மிகப்பெரிய பலம் நடிகர்கள் தான்.
நிச்சயம் பிடிக்கும்
மக்களுக்கு மிகவும் பிடித்த நிறைய நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். இந்த படம் இயக்குனர் ராஜேஷின் ஸ்டைலில் தான் இருக்கும்.
நயன்தாராவுக்கு முக்கியத்துவம்
இது ஒரு ஜாலியான படம். எனவே இதில் வில்லன் என யாரும் இல்லை. அதனால் தான் நயன்தாரா மாதிரியான ஒரு நடிகை தேவை என நினைத்தேன்.வேலைக்காரன் படத்தில் அவரை சரியாக பயன்படுத்த முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அது இந்த படம் மூலம் சரியாகிவிட்டது.
ஆறு மாதத்துக்கு ஒரு படம்
இது நாள் வரை நான் வருடத்துக்கு ஒரு படம் என்று தான் கொடுத்து வந்தேன். ஆனால் இனி ஆறு மாதத்துக்கு ஒரு படம் தர திட்டமிட்டுள்ளேன். நல்ல கருத்துள்ள படங்களாக அவை இருக்கும். இந்த புதிய முயற்சி நிச்சயம் ஒர்க்கவுட் ஆகும் என நான் நினைக்கிறேன்", இவ்வாறு அவர் கூறினார்.