Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'மெட்ராஸ் கபே' நல்லாத்தானே இருக்கு... காங்கிரஸார் 'கண்டுபிடிப்பு'!
சென்னை:மெட்ராஸ் கபே படத்தில் தமிழர்களுக்கு எதிரான எந்தக் காட்சியும் இல்லை. தமிழர்களை அதில் இழிவுபடுத்தவும் இல்லை. படம் நன்றாகத்தான் உள்ளது. அத்தனை தமிழர்களும் பார்க்க வேண்டிய படம் இது என்று பேசியுள்ளனர் காங்கிரஸார்.
மெட்ராஸ் கபே படத்துக்கு எதிராக தமிழகத்தில் போர் வெடித்துள்ளது. பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் மாணவர்களும் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலருக்காக போட்டுக் காட்டியுள்ளனர் படத் தயாரிப்பாளர்கள். அதைப் பார்த்து விட்டு வந்த அவர்கள் படம் நன்றாககத்தானே உள்ளது என்று பேசியுள்ளனர்.
இளைஞர்கள்
தமிழக இளைஞர் காங்கிரசார் இத்திரைப்படத்தை பார்க்க சென்னை தி.நகரில் உள்ள தேவி பிரிவியூ தியேட்டரில் ஸ்பேஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அனுராதா.. விஜய இளஞ்செழியன்
மாநில துணை தலைவர் விஜய இளஞ்செழியன் தலைமையில் மாநில நிர்வாகிகள் நாசே ராஜேஸ், அனுராதா அபி, விக்டரி ஜெயக்குமார் உட்பட பலர் திரைப்படத்தை பார்த்தனர்.
அப்படியெல்லாம் இல்லையே...
படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த இளஞ்செழியன் கூறுகையில், தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையில் மெட்ராஸ் கபே திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் எந்த காட்சிகளும் இல்லை.
உண்மையைத்தானே சொல்லியுள்ளனர்
உண்மை சம்பவங்கள் அடிப்படையில் கதை அமைக்கின்றனர். அந்த வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழு படத்தை திரையிட அனுமதித்த பின்பு அதை தடுப்பது நியாயமில்லை என்றார்.